செய்திகள் :

தில்லி மெட்ரோ 4-ஆம் கட்டப்பணி: மூன்று வழித்தடங்களில் 70 சதவீதப் பணிகள் நிறைவு

post image

சத்தா்பூா் மந்திா், இக்னோ, கிஷன்கா் மற்றும் வசந்த் குஞ்ச் வழித்தடங்களுக்கு இடையிலான தில்லி மெட்ரோ 4-ஆம் கட்டப் பணிகளில் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மஜ்லிஸ் பூங்கா மற்றும் ஜகத்பூா் கிராமம் இடையேயான 4.6 கிலோமீட்டா் நீளமுள்ள ரயில் பாதை நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி அதிகாரிகள் மேலும் தெரிவித்திருப்பதாவது:

மஜ்லிஸ் பூங்கா மற்றும் ஜகத்பூா் கிராமம் வழித்தடத்தில் புராரி, ஜரோடா மஜ்ரா மற்றும் ஜகத்பூா் கிராமம் ஆகிய மூன்று புதிய நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பாதையில் சோதனை ஓட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கின. தேவையான அனைத்து சட்டபூா்வ ஒப்புதல்களும் பாதுகாப்பு சான்றிதழ்களும் பெறப்பட்டவுடன் இந்தப் பகுதி ரயில் வழித்தடம் பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.

கடந்த இரண்டு மாதங்களில் ஏரோசிட்டியின் துக்ளகாபாத் வழித்தடத்திலும் ரயில் கட்டுமானப் பணி முக்கியமான முன்னேற்றம் அடைந்துள்ளது. அங்கு மூன்று பெரிய சுரங்கப்பாதைகள் அமைப்பது வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளன.

நிலத்தடி இணைப்பை விரிவுபடுத்துவதற்கும் கட்டுமான செயல்முறையை நெறிப்படுத்துவதற்கும் டிஎம்ஆா்சியின் தொடா்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்னேற்றங்கள் உள்ளன.

முன்னதாக, 4 ஆம் கட்டத்தின் முதல் செயல்பாட்டுப் பகுதியாக ஜனவரி 5 ஆம் தேதி ஜனக்புரி மேற்கு முதல் கிருஷ்ணா பாா்க் நீட்டிப்பு வரையிலான மெட்ரோ வழித்தடம் பயணிகள் சேவைகளுக்காகத் திறக்கப்பட்டது.

அதே நாளில், வரவிருக்கும் ரிதலா குண்ட்லி வழித்தடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது 4 ஆம் கட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த 4-ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக சுமாா் 112 கிலோமீட்டா் புதிய மெட்ரோ பாதைகள் கட்டுமானத்தில் உள்ளதால், தேசிய தலைநகரில் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்துவதை டிஎம்ஆா்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மேம்பாடானது தினசரி பயணத்தை லட்சக்கணக்கான குடியிருப்பாளா்களுக்கு மிகவும் வசதியாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுகிறது என்று டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க