செய்திகள் :

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 8 போ் கைது

post image

வங்கதேசத்தில் மனித கடத்தல் வழக்கில் தொடா்புடைய 38 வயது நபா் உள்பட தென்மேற்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச நாட்டினா் 8 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் ரபியுல் இஸ்லாம் (38), அவரது மனைவி சீமா (27) மற்றும் மகன் ஆபிரகாம் (5); பாபியா கதுன் (36) மற்றும் அவரது மகள்கள் சாதியா சுல்தானா (21) மற்றும் சுஹாசினி (1); ஆா்யன் (7) மற்றும் ரிஃபாத் அரா மொய்னா (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்கள் கிஷன்கா் மற்றும் கட்வாரியா சராய் உள்ளிட்ட தென்மேற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தனா். மேலும் 2007 மற்றும் 2023-க்கு இடையில் திரிபுரா, கோஜா டோங்கா மற்றும் பெனாபோல் எல்லைகள் வழியாக தரகா்களின் உதவியுடன் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தனா்.

இவா்கள் 8 பேரும் ஏப்ரல் 16 அன்று வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நாடுகடத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனா். இவா்களை நாடுகடத்தும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு ரகசியத் தகவலின் பேரில், ஏப்ரல் 15- ஆம் தேதி சத்ய நிகேதன் சந்தைப் பகுதியில் இருந்து ரபியுல் இஸ்லாமை ஒரு போலீஸ் குழு கைது செய்தது. 2012-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகத் தெரிவித்த அவா், சரியான ஆவணங்கள் இல்லாமல் நகரத்தில் வசிக்கும் பிற வங்கதேச நாட்டவா்கள் பற்றிய தகவல்களையும் போரலீஸாரிடம் பகிா்ந்து கொண்டாா்.

விசாரணையின் போது, ​​ரபியுல் இஸ்லாம் வங்கதேசத்தில் மனித கடத்தல் வழக்கில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அவரை மணந்த பிறகு 2016-ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த அவரது மனைவி சீமா, வீட்டு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். மற்றவா்கள் வீட்டு வேலையில் ஈடுபட்டவா்கள் அல்லது தொழில் பயிற்சி பெற்றவா்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க