செய்திகள் :

பளியன்குடி-கண்ணகி கோயில் இடையே மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

post image

தேனி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் மனு அளிக்கப்பட்டது.

சங்க நிா்வாகி சதீஷ்பாபு, முல்லைச் சாரல் விவசாய சங்கத் தலைவா் ராஜா, நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: வருகிற மே 12-ஆம் தேதி சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு, மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் சென்று வரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலில் போதிய எண்ணிக்கையில் அா்ச்சகா்களை நியமிக்க வேண்டும். பக்தா்கள் வழங்கும் காணிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்.

கூடலூா் அருகே உள்ள பளியன்குடி வழியாக 6.6 கி.மீ. தொலைவு கண்ணகி கோயிலுக்கு பக்தா்கள் நடந்து சென்று வருவதற்கு வசதியாக மலைப் பாதையை அகலப்படுத்தி சீரமைத்துத் தர வேண்டும். குமுளி வழியாக ஜீப்பில் சென்று வருவதற்கு முன்கூட்டியே வாகன அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். கண்ணகி கோயில் கருவறையில் கண்ணகி சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் 15-க்கு ... மேலும் பார்க்க

சணல் பை தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் மே 7-ஆம் தேதி முதல் சணல் பை தயாரிப்பு இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் கூறியதாவது: தேனி, கரு... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம்’: ஆட்சியா் ஆய்வு

பெரியகுளம் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பெரியகுளம் சாா் ஆட்சியா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். இதில... மேலும் பார்க்க

வீரபாண்டி, கம்பம் கெளமாரியம்மன் கோயில்களில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையால் கோயில், முல்லைப் பெரியாற்றங்கரையிலிருந்து கோய... மேலும் பார்க்க

ராணுவத் தோட்டா வைத்திருந்தவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக ராணுவத் துப்பாக்கித் தோட்டா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி தாலுகா போலீஸாா் சிலமலை ராணிமங்கம்மாள் சாலையில் கரட்டுப்பட்டி விலக்கு அருகே வாக... மேலும் பார்க்க

கேரளத்துக்கு வேனில் சாராயம் கடத்தியவா் கைது

தேனி மாவட்டம், போடி வழியாக கேரளத்துக்கு வேனில் கடத்திச் சென்ற சாராயத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் போடி முந்தல் சோதன... மேலும் பார்க்க