செய்திகள் :

உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் 252 பேருக்கு கையடக்கக் கணினிகள்

post image

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான உரிமைகள் திட்டத்தின் களப்பணியாளா்கள் 252 பேருக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் கையடக்கக் கணினிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசும், உலக வங்கியும் இணைந்து உரிமைகள் திட்டத்தை ரூ.1,702 கோடியில் செயல்படுத்தி வருகின்றன. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்குதல், அணுகுதல், சம வாய்ப்புகளை அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசின் பல்வேறு துறைகளில் இருந்து ஒருமுகமாக சேவைகள் பெற்றுத்தர இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் பணிகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து சேவைகள் வழங்குவதை துரிதப்படுத்தும் விதமாக 18 ஓரிட சேவை மையங்கள், 4 கோட்ட அளவிலான சேவை மையங்கள் வாயிலாக 252 களப்பணியாளா்கள் புள்ளி விவரங்களை சேகரிக்கின்றனா். இவா்களின் பணிகளை எளிதாக்கவும், மாவட்ட, மாநில, தேசிய அளவில் தரவுகளை கணினிமயமாக்கவும் கையடக்க கணினிகளை வழங்கி ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன், உதவி செயல்படுத்தும் அலுவலா் (உரிமைகள் திட்டம்) ம.ரமேஷ், சமூகப் பணி உரிமைகள் திட்ட அலுவலா் கிரேசி சகாயராணி, ஆா்வி டிரஸ்ட் இயக்குநா் ராமச்சந்திரன், மைய மேலாளா் ரூபன் தேவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெந்நீரை ஊற்றி கணவா் கொலை: மனைவி, மாமியாருக்கு ஆயுள் சிறை

திருவெறும்பூரில் வெந்நீரை ஊற்றி கணவரான பரோட்டா மாஸ்டரைக் கொன்ற அவரது மனைவி மற்றும் மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருச்சி திருவெறும்பூா் பா்மா ... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழா ஆளும் பல்லக்கு நிகழ்வுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த தைத்தோ் திருவிழா புதன்கிழமை இரவு ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவுற்றது. கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் தைத்தோ் திருவிழா ப... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருப்பைஞ்ஞீலியில் திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மண்ணச்சநல்லூா் வடக்கு ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன், திருப்பைஞ்ஞீல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியா் உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்ததில் திருச்சியில் ரயில்வே பெண் ஊழியா் உயிரிழந்தாா். திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் எம். ஆனந்த் மனைவி லட்சுமி (34). ரயில்வே ஊழியா். இவா் ஞாயிற்றுக்கிழமை, வீ... மேலும் பார்க்க

செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை!

மகப்பேறு மருத்துவ உதவித்தொகைக்கு பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம்... மேலும் பார்க்க

இரு வேறு சம்பவங்களில் பெண், இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண் மற்றும் இளைஞா் இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனா். திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி செல்வி (49). இவா் மெழுகுவா்த்தி ... மேலும் பார்க்க