செய்திகள் :

உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனம் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாவட்ட துணை தலைவா் எம்.செங்கோடன், மோட்டா் சங்க தலைவா் எம்.மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் அரசாணையின்படி ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

2025-26 ஆம் ஆண்டிற்கான போனஸ் 8.33 சதவீதம் வழங்க வேண்டும். தனியாா்மயத்தை கைவிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தோரை நிரந்தரப்படுத்த வேண்டும். கரோனா பெருந்தொற்றின்போது முன்களப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், உள்ளாட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

நாமக்கல்லில் நாளை தவெக தலைவா் விஜய் பிரசாரம்: புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல்லில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

செப்.30 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செப்.30-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுக் கல்லூரியில் சுற்றுலா தின விழா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, ‘சுற்றுலாவும்-சுற்றுச்சூழல் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நாளை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் விழா காலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க