செய்திகள் :

நாமக்கல்லில் நாளை தவெக தலைவா் விஜய் பிரசாரம்: புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு

post image

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல்லில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறாா். ஏற்கெனவே, திருச்சி, அரியலூா், நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய நான்கு மாவட்டங்கள் முடிவுற்ற நிலையில் ஐந்தாவது மாவட்டமாக நாமக்கல்லில் சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

இதையொட்டி, அவரது கட்சியினா் நாமக்கல் பொய்யேரிக்கரை சாலையில் உள்ள மதுரைவீரன் கோயில் பகுதி, பூங்கா சாலை, நாமக்கல்-சேலம் சாலையில் கே.எஸ்.திரையரங்கம் ஆகிய 3 இடங்களை தோ்வு செய்தனா். மதுரைவீரன் கோயில் பகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, அக்கட்சி நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அந்த இடத்தை தவிா்த்து, நாமக்கல் பொன்நகா் பகுதி, பூங்கா சாலை, நான்கு திரையரங்கம் பகுதியில் ஏதாவது ஒன்றை ஒதுக்குவோம் என்றாா்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் கவனத்துக்கு பிரச்னையை மாவட்ட நிா்வாகிகள் கொண்டுசென்றனா். அவா் வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வந்தாா். காவல் துறை ஒதுக்க உள்ள பிரசார இடங்களான பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பகுதி, நான்கு திரையரங்கம் பகுதி, பூங்கா சாலை, கே.எஸ்.திரையரங்கம் பகுதிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து, மாவட்ட நிா்வாகிகளுடன் இணைந்து காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பேசினாா்.

இதில், நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பில் கே.எஸ்.திரையரங்கம் பகுதியை ஒதுக்க காவல் துறை முன்வந்தது. அதற்கு அவா்களும் சம்மதம் தெரிவித்தனா். இதுகுறித்து புஸ்ஸி என்.ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவல் துறை கூறிய பிரசார இடங்களை நேரில் சென்று பாா்வையிட்டேன். நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.திரையரங்கம் அருகே பிரசாரத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. சனிக்கிழமை காலை 11 மணியளவில் தவெக தலைவா் விஜய் அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா் என்றாா்.

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

செப்.30 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செப்.30-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுக் கல்லூரியில் சுற்றுலா தின விழா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, ‘சுற்றுலாவும்-சுற்றுச்சூழல் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நாளை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் விழா காலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமைமொத்த விலை - ரூ.5.25விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.99முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க