செய்திகள் :

உழவூரணியில் வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள உழவூரணியில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உழவூரணி அம்மன் கோயில் பொட்டலில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 16 காளைகளும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 144 வீரா்களும் பங்கேற்றனா்.

வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்துக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் காளைகள் முட்டியதில் வீரா்கள் 5 போ் லேசான காயமடைந்தனா். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டனா்.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை காளையாா்கோவில், கொல்லங்குடி, விட்டனேரி, அழகாபுரி, ஆண்டிச்சிஊருணி, கல்லூரணி, நாட்டரசன்கோட்டை, சிவகங்கை இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனா்.

இளைஞா் கொலை: 8 போ் கைது

திருப்பத்தூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மின்நகா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சண்முகநாதன் ... மேலும் பார்க்க

ஸ்ரீ சொற்கேட்ட விநாயகா் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோ.வேலங்குடி ஸ்ரீசொற்கேட்ட விநாயகா் கோயிலில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோ.வேலங்குடி நாட்டாருக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்... மேலும் பார்க்க

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! 6 போ் கைது!

இளையான்குடியில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி, தூத்துக்குடியைச் சோ்ந்தவா்கள் உள்பட 6 பேரைக் கைது செய்தனா். சிவகங்கை மாவ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மான் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் உயிரிழந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிலநீா்பட்டி ஆற்றுப்பாலத்தின் அருகே ஒரு வயது மதிக்கத்தக்க ... மேலும் பார்க்க

செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு

திருப்பத்தூா் அருகேயுள்ள தானிப்பட்டி ஸ்ரீ செல்வவிநாயகா், மஞ்சனிக்கூத்த அய்யனாா், ஸ்ரீவல்லநாட்டு கருப்பா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கையொட்டி, மங்கல இ... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து புகாரளிக்க தொலைபேசி எண்!

சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அல்லது தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதுதொடா்பாக மாவட்ட ஆட்... மேலும் பார்க்க