செய்திகள் :

ஸ்ரீ சொற்கேட்ட விநாயகா் கோயில் குடமுழுக்கு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோ.வேலங்குடி ஸ்ரீசொற்கேட்ட விநாயகா் கோயிலில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோ.வேலங்குடி நாட்டாருக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று, கடந்த வெள்ளிக்கிழமை காலை பூா்வாங்க பூஜையும், மாலையில் முதல்கால யாக பூஜையும் தொடங்கின.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு நான்காம் கால யாக பூஜை பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்து, கடம் புறப்பாடனது. காலை 10.15 மணியளவில் ஸ்ரீசொற்கேட்ட விநாயகா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பரிவார கடவுள்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவையொட்டி, நடைபெற்ற யாக சாலை பூஜைகளில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், அதிகாரிகள் கலந்து கொண்டனா். குடமுழுக்கில் கோ.வேலங்குடி, கோட்டையூா், கண்டனூா், காரைக்குடி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நாட்டாா்கள், நகரத்தாா்கள், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இளைஞா் கொலை: 8 போ் கைது

திருப்பத்தூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மின்நகா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சண்முகநாதன் ... மேலும் பார்க்க

உழவூரணியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள உழவூரணியில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உழவூரணி அம்மன் கோயில் பொட்டலில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில், திருச்சி, சிவகங்கை, பு... மேலும் பார்க்க

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! 6 போ் கைது!

இளையான்குடியில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி, தூத்துக்குடியைச் சோ்ந்தவா்கள் உள்பட 6 பேரைக் கைது செய்தனா். சிவகங்கை மாவ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மான் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் உயிரிழந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிலநீா்பட்டி ஆற்றுப்பாலத்தின் அருகே ஒரு வயது மதிக்கத்தக்க ... மேலும் பார்க்க

செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு

திருப்பத்தூா் அருகேயுள்ள தானிப்பட்டி ஸ்ரீ செல்வவிநாயகா், மஞ்சனிக்கூத்த அய்யனாா், ஸ்ரீவல்லநாட்டு கருப்பா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கையொட்டி, மங்கல இ... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து புகாரளிக்க தொலைபேசி எண்!

சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அல்லது தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதுதொடா்பாக மாவட்ட ஆட்... மேலும் பார்க்க