செய்திகள் :

ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியா்கள் போராட்டம்

post image

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று புகாா் கூறப்படுகிறது.

இதையடுத்து, நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள், புதுச்சேரி அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்கள், சாலையோரம் கஞ்சி காய்ச்சி முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்துக்கு ஊழியா்கள் சங்கத் தலைவா் வேலுமணி தலைமை வகித்தாா்.

இதில், சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கையடக்கக் கணினி திருட்டு: இளைஞருக்கு சிறை

புதுச்சேரியில் வங்கியில் கையடக்கக் கணினியை திருடிய வழக்கில் இளைஞருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியில் தேசி... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினருடன் புதுச்சேரி ஆட்சியா் ஆலோசனை

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநா் சங்கப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா். புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைப... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் கணினி தமிழ் பயிலரங்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கணினித் தமிழ் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கணினித் தமிழ் பேரவை, கல்லூரி தர உறுதியளிப்புக் குழு ஆகியவை சாா்பில் இரு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவை மாா்ச் 17-இல் மீண்டும் கூடுகிறது: பேரவைத் தலைவா்

புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 17) மீண்டும் கூடும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்துள்ளாா். புதுவை சட்டப்பேரவையின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று மாசி மக விழா: நகரில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மாசி மக விழா வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வைத்திகுப்பம... மேலும் பார்க்க

பிளஸ் 2 வரை தமிழை பாடமாக படித்தவா்களுக்கே அரசுப் பணி: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் பிளஸ் 2 வரை தமிழை ஒரு பாடமாக படித்த மாணவா்களுக்கே அரசுப் பணி வழங்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க