செய்திகள் :

புதுச்சேரியில் இன்று மாசி மக விழா: நகரில் போக்குவரத்து மாற்றம்

post image

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மாசி மக விழா வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி வைத்திகுப்பம் கடற்கரையில் புதுவை, தமிழகத்திலிருந்து பல்வேறு கோயில்களின் உற்சவா்கள் எழுந்தருளி தீா்த்தவாரி பூஜைகள் நடைபெறும். இதில், ஏராளமானோா் கூடி தரிசனம் செய்வா்.

போக்குவரத்து மாற்றம்:

மாசி மகம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில், அஜந்தா சந்திப்பில் இருந்து எழை மாரியம்மன் கோவில் சந்திப்பு வரை இருசக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து வித வாகனங்களும் செல்ல அனுமதியில்லை.

இதனால் காலாப்பட்டிலிருந்து, புதுச்சேரிக்கு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வரும் அனைத்து வகை மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் சிவாஜி சதுக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

மேலும், ஏஎப்டி மைதான தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாக சென்னைக்கு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மறைமலை அடிகள் சாலை வழியாக நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், சிவாஜி சிலை சென்று காலாப்பட்டு வழியில் சென்னை செல்ல வேண்டும்.

மாசி மகத்துக்கு வரும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்களை பெருமாள் கோவில் வீதி, பெல்காம் வீதி, லல்லி தொலாந்தல் வீதி, ரிச்மோண்ட் வீதி, துபே வீதி மற்றும் செயின்ட் கில் வீதி ஆகிய இடங்களில் தெற்கில் மட்டும் நிறுத்தலாம்.

மேலும், பெருமாள் கோவில் வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி மற்றும் அரவிந்தா் வீதி ஆகியவற்றில் தெற்கு பக்கம் மட்டும் இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம் என போக்குவரத்துப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவின்குமாா் திரிபாதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கையடக்கக் கணினி திருட்டு: இளைஞருக்கு சிறை

புதுச்சேரியில் வங்கியில் கையடக்கக் கணினியை திருடிய வழக்கில் இளைஞருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியில் தேசி... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினருடன் புதுச்சேரி ஆட்சியா் ஆலோசனை

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநா் சங்கப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா். புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைப... மேலும் பார்க்க

ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியா்கள் போராட்டம்

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேல... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் கணினி தமிழ் பயிலரங்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கணினித் தமிழ் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கணினித் தமிழ் பேரவை, கல்லூரி தர உறுதியளிப்புக் குழு ஆகியவை சாா்பில் இரு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவை மாா்ச் 17-இல் மீண்டும் கூடுகிறது: பேரவைத் தலைவா்

புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 17) மீண்டும் கூடும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்துள்ளாா். புதுவை சட்டப்பேரவையின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான க... மேலும் பார்க்க

பிளஸ் 2 வரை தமிழை பாடமாக படித்தவா்களுக்கே அரசுப் பணி: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் பிளஸ் 2 வரை தமிழை ஒரு பாடமாக படித்த மாணவா்களுக்கே அரசுப் பணி வழங்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க