செய்திகள் :

எதையும் செய்யறிவிடம் கேட்கலாம் என மெத்தனமாக இருக்கக் கூடாது: மு.க. ஸ்டாலின்

post image

சென்னை: எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர் காரணம் என சொல்வதுதான் மிகப்பெரிய விருது, மாணவர்களிடம் எதையும் அன்புடன் சொல்லுங்கள், அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று ஆசிரியர்களுக்குக் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதுவானாலும் கூகுள், செய்யறிவிடம் (ஏஐ) கேட்டுக் கொள்ளலாம் என மெத்தனத்தில் இருந்துவிடக் கூடாது.

மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவாற்றலை வளர்க்க வேண்டும். தொழில்நுட்பம், மனித சந்ததிக்கான வேறுபாட்டை புரிய வைக்க வேண்டும். இலக்கியங்கள், பொது அறிவு, சமூக ஒழுக்கம், சுற்றுச்சூல் குறித்து புரிய வைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு எந்தளவு அறிவாற்றல் முக்கியமோ உடல்நலமும் முக்கியமும். மாணவர்களின் குடும்ப சூழல், பின்புலம் அறிந்து செயல்பட வேண்டும். நீங்கள்தான் இரண்டாவது பெற்றோர். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வி சூழலில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.

அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமையின் அடையாளமாக உயர்ந்து வருகின்றனர். பள்ளிகளின் உள்கட்டமைப்பு தரம் உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கு சாதி உணர்வு, பாலின பாகுபாடு, போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

சமத்துவம், சமூக நீதி தேவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எதற்கு, எப்படி? என கேட்கும் பகுத்தறிவு மிக்க தலைமுறையாக மாணவர்களை உருவாக்க வேண்டும்.

புதுப்புது முயற்சியை எடுக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களிடம் எதையும் அன்புடன் சொல்லுங்கள். அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்காதீர்கள். மாணவர்களுக்குத்தான் ஆசிரியக் பாடம் எடுப்பார்கள். ஆசிரியர்களுக்கே படம் எடுத்தவர் அமைச்சர் அன்பில் மகேஸ். ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் அல்ல கல்வியுடன் அனுபவத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பவர்கள். மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்த வேண்டியது நமது கடமை என்று தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்: தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்... மேலும் பார்க்க

சென்னையில் போலி கால்சென்டர்கள்: 2 பெண்களை கைது செய்த புதுச்சேரி போலீஸ்!

சென்னை: போலியாக கால் சென்டர் நடத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பலரிடமிருந்து பணத்தை பெற்று சுமார் ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்த இரண்டு பெண்களை புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் க... மேலும் பார்க்க

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டம்: சாலைவலம் வரும் முதல்வர் ஸ்டாலின்

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.ச... மேலும் பார்க்க

விஜய் பிரசாரம்! நாகையில் மின்தடை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று நண்பகல் 12.30 மணிய... மேலும் பார்க்க

திருச்சி - நாகைக்கு சாலை வழியே செல்லும் விஜய்!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த தவெக தலைவர் விஜய், சாலை வழியாக நாகப்பட்டினத்துக்கு காரில் புறப்பட்டார்.நாகப்பட்டினம் எல்லையில் விஜய்யை வரவேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்க... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவையில், க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், சனிக்கிழமை காலை முதல் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் க்யூஆர் சேவை மூலம்... மேலும் பார்க்க