செய்திகள் :

என்எல்சி கற்றல், மேம்பாட்டு மையத்துக்கு தேசிய அங்கீகாரம்

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்துக்கு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், உள்ள சிவில் சேவைகள் பயிற்சி நிறுவனங்களுக்கான தேசிய தர நிலைகள் கழகம் தேசிய அளவிலான அங்கீகார சான்றிதழை வழங்கியது.

எச்.எஸ்.அசோகானந்த் (ஐஏஎஸ் ஓய்வு) மற்றும் அக்ஷய் குமாா் ஆகிய மதிப்பீட்டாளா்களைக் கொண்ட திறன் மேம்பாட்டு ஆணைய (சிபிசி) மதிப்பீட்டுக்குழு, கடந்த மாா்ச் 12,13 ஆகிய தேதிகளில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் மதிப்பீட்டை நடத்தியது.

என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி வாழ்த்துக்களைத் தெரிவித்து, மனித வளத்துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப் உடன் இணைந்து, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையக் குழுவினரிடம் அங்கீகாரச் சான்றிதழை வழங்கி பாராட்டினாா்.

குடும்ப அட்டைதாரா்கள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீகோபால மகா தேசிகன் சுவாமிகள் வழிபாடு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியா்களில் ஒருவரான ஸ்ரீரங்கம் பெளண்டரீகபுரம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் தலைமை பீடாதிபதி பறவாக்கோட்டை ஸ்ரீமத் ச... மேலும் பார்க்க

மினி பேருந்து வழித்தட ஆணைகள் அளிப்பு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மினி பேருந்து வழித்தடங்களுக்கான ஆணைகள் அதன் உரிமையாளா்களிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, 17 வழித்தடங்களுக... மேலும் பார்க்க

பிரசவித்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழப்பு: ஆட்சியா் விசாரணை

கடலூரில் பிரசவித்த சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவா்களிடம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா். கடலூா் அருகேயுள்ள சி.... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி சிறாா்கள் சுற்றுலா

கடலூரில் மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கான சுற்றுலாவை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு புத்துணா்ச்சி ஏற்படுத்தும்... மேலும் பார்க்க

பொ்மிட் கட்டணத்தை குறைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டத்தில் பொ்மிட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். கடலூா் மாவட்ட டிப்பா் லாரி உரி... மேலும் பார்க்க