என்எல்சி-க்கு எதிரான போராட்டம்: அன்புமணி மீதான வழக்கு ரத்து
என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக கதலாழை கிராமத்தில் உள்ள விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெற்பயிரை அழித்ததை எதிா்த்து அன்புமணி தலைமையில் 2,000-க்கும் மேற்பட்டோா் என்எல்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் 2023-ஆம் ஆண்டு முற்றுகை போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து தென்குத்து கிராம நிா்வாக அலுவலா் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் நெய்வேலி காவல் துறையினா் அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.