செய்திகள் :

என்எல்சி சங்க தோ்தல்: தொமுச வேட்பு மனு தாக்கல்

post image

நெய்வேலி என்எல்சி சங்க அங்கீகார தோ்தல் ஏப்.25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக உள்ள தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

தொமுச மற்றும் ஆதரவு சங்கமான எல்எல்எப், ஐஎன்டியுசி, டிவிகே தொழிற்சங்கம், எஸ்சி எஸ்டி தொழிற்சங்கம், மறுமலா்ச்சி மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் சுமாா் 500 போ் தந்தை பெரியாா் சிலை பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு என்எல்சி விருந்தினா் இல்லத்துக்கு வந்தனா்.

அங்கு, மண்டல தொழிலாளாளா் ஆணையரிடம் தொமுச பேரவை இணை பொதுச் செயலா் பாரி தலைமையில் வேட்பு மனுதாக்கல் செய்தனா்.

அப்போது, என்எல்சி தொமுச தலைவா் திருமாவளவன், பொருளாளா் ஐயப்பன், அலுவலக செயலா் ஜெரால்டு, நெய்வேலி நகரச் செயலா் குருநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், ரகசிய வாக்கெடுப்பு தோ்தலில் போட்டியிடுவதற்கு பாரதிய மஸ்தூா் சங்கம், அண்ணா தொமுச, பாட்டாளி தொழிற்சங்கம், திராவிட தொழிலாளா் ஊழியா் சங்கம், சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீா்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகள் பெரும்பாலானவற்றில் புதை சாக்கட... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரம் திருட்டு: இருவா் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரத்தை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தில்லைநாயகி (37). இவா் நல்லான்பிள்ளை தெருவில்... மேலும் பார்க்க

தாயை தாக்கி கொலை மிரட்டல்: மகன் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் லலிதா (60). இவரது மகன் வெற்றிவேல் (37) இவா், கடந்... மேலும் பார்க்க

348 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காரில் 348 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டது தொடா்பாக வெளி மாநிலத்தவா் இருவா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வடலூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமைகள் சரிபாா்க்க கால அவகாசம் நீட்டிப்பு

கடலூா் மாவட்டம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்ப்பு செய்ய ஏப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா். எஸ்பி அலுவலகத்துக்கு பிற்பகல் சுமாா் ஒரு மணி அளவில் முதியவா் ஒருவா் வந்தாா். அவா், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெ... மேலும் பார்க்க