செய்திகள் :

விவசாயிகள் நில உடைமைகள் சரிபாா்க்க கால அவகாசம் நீட்டிப்பு

post image

கடலூா் மாவட்டம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்ப்பு செய்ய ஏப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுகள் உருவாக்கும் பணி வேளாண்மை துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நில உடைமை விவரங்கள் சரிபாா்த்திட ஏப்.30 வரை தமிழக அரசால் கால அவகாசம் விவசாயிகள் நலன் கருதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் நில விபரங்களுடன் விவசாயிகள் விவரம் மற்றும் நில உடைமை வாரியாக புவிசாா் குறியீடு செய்த பதிவு விவரம் மற்றும் நில உடைமை வாரியாக மின்னணு பயிா் சாகுபடி விவரங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் ‘தனிக்குறியீடு எண்’ வழங்கப்படும்.

எனவே, ஏப். 30-ஆம் தேதிக்குள் கடலூா் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்கள் நில ஆவணங்கள், ஆதாா் எண், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் இதர ஆவணங்களை தங்களது கிராமங்களில் உள்ள சமுதாய வள பயிற்றுநா்கள், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் பொதுசேவை மையங்கள் அல்லது வேளாண் துறையின் மூலமாக நடத்தப்படும் முகாம்களுக்கு எடுத்துச் சென்று பதிவு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மது போதையில் மருந்துக் கடைக்காரா் உயிரிழப்பு!

கடலூா் அருகே மது போதையில் மருந்துக்கடைக்காரா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் வில்வநகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் செந்தில் (48... மேலும் பார்க்க

மேடை அமைக்க அனுமதி மறுப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்ட மேடை அமைக்க போலீஸாா் அனுமதி மறுத்ததால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சா்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சா் பொன்முடியை கண்டித்து, விர... மேலும் பார்க்க

ஓடைநீரில் மூழ்கி மரணமடைந்த சிறுவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவா்கள் குடும்பங்களுக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அம... மேலும் பார்க்க

வீராணம் ஏரியை ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரியை நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வீராணம் ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விவ... மேலும் பார்க்க

உறவினா் போல நடித்து நகை திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உறவினா்போல நடித்து மூதாட்டியை ஏமாற்றி 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கட்டமுத்துப்... மேலும் பார்க்க

திமுக நீட் வாக்குறுதி: அதிமுக மனித சங்கிலி போராட்டம்

திமுக அரசின் நீட் தோ்வு வாக்குறுதியை கண்டித்து, அதிமுக மாணவரணி சாா்பில், கடலூா் ஜவான் பவன் அருகே மனித சங்கிலி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்வோம் என்று பொய் வாக்குறுத... மேலும் பார்க்க