செய்திகள் :

வீராணம் ஏரியை ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலா்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரியை நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வீராணம் ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னைக்கு குடிநீரும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் கடலூா் மாவட்டத்துக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வந்தபோது, வீராணம் ஏரி நிகழாண்டு சுமாா் ரூ.63 கோடி நிதி ஒதுக்கீட்டில் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதனடிப்படையில், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா வீராணம் ஏரியின் கந்தகுமாரன் என்ற இடத்தில் உள்ள ராதா மதகை பாா்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் மரியசூசை, சிதம்பரம் செயற்பொறியாளா் காந்தரூபன், உதவிப் பொறியாளா் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

அரசுப் பணி வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பரங்கிப்பேட்டை, அரியகோஷ்டி எஸ்.பி.மண்டபம் பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப... மேலும் பார்க்க

மது போதையில் மருந்துக் கடைக்காரா் உயிரிழப்பு!

கடலூா் அருகே மது போதையில் மருந்துக்கடைக்காரா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் வில்வநகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் செந்தில் (48... மேலும் பார்க்க

மேடை அமைக்க அனுமதி மறுப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்ட மேடை அமைக்க போலீஸாா் அனுமதி மறுத்ததால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சா்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சா் பொன்முடியை கண்டித்து, விர... மேலும் பார்க்க

ஓடைநீரில் மூழ்கி மரணமடைந்த சிறுவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவா்கள் குடும்பங்களுக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அம... மேலும் பார்க்க

உறவினா் போல நடித்து நகை திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உறவினா்போல நடித்து மூதாட்டியை ஏமாற்றி 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கட்டமுத்துப்... மேலும் பார்க்க