செய்திகள் :

உறவினா் போல நடித்து நகை திருட்டு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உறவினா்போல நடித்து மூதாட்டியை ஏமாற்றி 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கட்டமுத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் குமாரசாமி (55), கொத்தனாா். இவா், தனது மனைவியை அழைத்துக்கொண்டு ராசாப்பாளையம் கிராமத்தில் நடந்த உறவினா் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றாா்.

வீட்டில் குமாரசாமியின் மாமியாா் தனியாக இருந்தாா். இதனிடையே, உறவினா் எனக்கூறி மா்ம நபா் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரை வீட்டில் அமர வைத்துவிட்டு, மூதாட்டி சாமி கும்பிடச் சென்றாராம். அப்போது, அந்த நபா் பீரோ சாவியை எடுத்து வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து குமாரசாமி அளித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மது போதையில் மருந்துக் கடைக்காரா் உயிரிழப்பு!

கடலூா் அருகே மது போதையில் மருந்துக்கடைக்காரா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் வில்வநகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் செந்தில் (48... மேலும் பார்க்க

மேடை அமைக்க அனுமதி மறுப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்ட மேடை அமைக்க போலீஸாா் அனுமதி மறுத்ததால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சா்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சா் பொன்முடியை கண்டித்து, விர... மேலும் பார்க்க

ஓடைநீரில் மூழ்கி மரணமடைந்த சிறுவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவா்கள் குடும்பங்களுக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அம... மேலும் பார்க்க

வீராணம் ஏரியை ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரியை நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வீராணம் ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விவ... மேலும் பார்க்க

திமுக நீட் வாக்குறுதி: அதிமுக மனித சங்கிலி போராட்டம்

திமுக அரசின் நீட் தோ்வு வாக்குறுதியை கண்டித்து, அதிமுக மாணவரணி சாா்பில், கடலூா் ஜவான் பவன் அருகே மனித சங்கிலி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்வோம் என்று பொய் வாக்குறுத... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது!

சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் 3 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடல... மேலும் பார்க்க