செய்திகள் :

``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்தவர்கள்; ஆனால் விஜய்'' - கருணாஸ் பேட்டி

post image

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி, உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் அழைத்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க தவெக கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

விஜய்
விஜய்

இந்நிலையில் விஜய் குறித்துப் பேசியிருக்கும் கருணாஸ், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் நடிகர்களாக இருந்து புகழ்பெற்று அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

மக்களுக்காக நின்று மக்களுக்காகப் பணி செய்துதான் அமைச்சராக, முதலமைச்சராக மக்களை ஆள முடியும். ஆனால், மக்களுக்குப் பிரச்னை என அந்த இடத்திலேயே நிற்காமல் ஓடி ஒளிந்துகொள்வது எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

கருணாஸ்
கருணாஸ்

மக்கள் பிரச்னைகளை மக்களுடன் நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்குத் தகுதியற்றவர்கள் என்பதுதான் என் கருத்து.

இதைவிட பெரிய கூட்டங்களை, பிரச்னைகளை, மாநாடுகளை கையாண்டவர் விஜயகாந்த். மக்களுக்காக களத்தில் இறங்கி நிற்பவன்தான் தலைவன். சினிமாவில் மட்டும் இறங்கி சண்டைபோடுபவன் தலைவனாகமுடியாது. தலைவனாகக்கூடிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்." என்று பேசியிருக்கிறார் கருணாஸ்.

சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பூர்

குடியரசுத் துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், இன்று (அக்டோபர் 28) மற்றும் நாளை (அக்டோபர் 29) என இரண்டு நாட்கள் திருப்பூரில் தங்கி... மேலும் பார்க்க

Tvk Vijay Resort சந்திப்பு: Karur குடும்பங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன? Decode

Tvk Vijay Karur stampedeல் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் என்ன நடந்தது, கரூர் அசம்பாவிதம் நடந்த கடந்த ஒரு மாதத்தில் என்னவெல்லாம் நடந்தது என விளக்க... மேலும் பார்க்க

``AI அமைச்சரின் 83 குழந்தைகள் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதி செய்வார்கள்'' - அல்பேனியா பிரதமர் அதிரடி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா, கடந்த செப்டம்பர் மாதம் உலகின் முதல் ஏ.ஐ. (Artificial Intelligence) அமைச்சரை நியமித்து உலகின் கவனத்தை ஈர்த்தது. ஊழலை ஒழிக்கவும், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும் உர... மேலும் பார்க்க

``நடிக்கும் போது நோட்டை கொடுப்போம்; நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம்'' - சீமான் விமர்சனம்

மருது பாண்டியர்கள் 224-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். சீமா... மேலும் பார்க்க

கரூர்: 'ஏன் நேரில் வரவில்லை?'- விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்

கரூரில் கடந்த மாதம் 27 -ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் 20 லட்சம் ரூபாய்... மேலும் பார்க்க

தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் & 3 யூனியன் பிரதேசங்களில் SIR; அனைத்து கட்சிகளையும் அழைக்கும் ஸ்டாலின்!

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது.தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கி... மேலும் பார்க்க