செய்திகள் :

கரூர்: 'ஏன் நேரில் வரவில்லை?'- விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்

post image

கரூரில் கடந்த மாதம் 27 -ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர். அதன் அடிப்படையில், கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியைச் சேர்ந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரமேஷ் குடும்பத்திற்கு நடிகர் விஜய் 20 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து, உயிரிழந்த ராமேஷ் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசும் பொழுது, 'நேரில் உங்களை சந்திப்பேன்' என்று கூறியிருந்த நிலையில், மாமல்லபுரம் தனியார் சொகுசு விடுதியில் பாதிக்கப்பட்ட மக்களை ஆம்னி பேருந்தில் அழைத்து வரச்சொல்லி சந்தித்தார்.

ஆனால், கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் அவர்களின் குடும்பத்தின் சார்பில் அவரது மனைவி சங்கவி செல்லவில்லை.

money return

அதற்கு பதிலாக இறந்தவரின் அக்கா பூமதி, அவரது கணவர் அர்ஜுனன், உறவினர் பாலு ஆகியோர் சென்னைக்கு சென்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரமேஷின் மனைவி சங்கவி தனக்கு தெரியாமல் அவர்கள் சென்ற காரணத்தினாலும், விஜய் நேரில் வராத காரணத்தினாலும் விஜய் வங்கி கணக்கில் செலுத்திய 20 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பி உள்ளார்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை த.வெ.க தலைவர் விஜய் சென்னை மாமல்லபுரத்துக்கு அழைத்து வரச்சொல்லி சந்தித்து ஆறுதல் சொல்லிய நிலையில், ரமேஷின் மனைவி விஜய் வழங்கிய ரூ. 20 லட்சத்தை திருப்பி அனுப்பியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்தவர்கள்; ஆனால் விஜய்'' - கருணாஸ் பேட்டி

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி, உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

``நடிக்கும் போது நோட்டை கொடுப்போம்; நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம்'' - சீமான் விமர்சனம்

மருது பாண்டியர்கள் 224-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். சீமா... மேலும் பார்க்க

தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் & 3 யூனியன் பிரதேசங்களில் SIR; அனைத்து கட்சிகளையும் அழைக்கும் ஸ்டாலின்!

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது.தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கி... மேலும் பார்க்க

`மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு; விஜய் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது!' - ஓபிஎஸ்

சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குரு பூஜையில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓ பன்னீர் செல்வம் மருது பாண... மேலும் பார்க்க