செய்திகள் :

``நடிக்கும் போது நோட்டை கொடுப்போம்; நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம்'' - சீமான் விமர்சனம்

post image

மருது பாண்டியர்கள் 224-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார்.

 சீமான், விஜய்
சீமான், விஜய்

"கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விஜய்யை பார்க்க செல்கிறார்கள் இந்த அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

"கல்வி அரசியலை கற்பிக்கவில்லை. ஒழுக்க நெறிமுறைகளை கற்றுத்தரும் கல்வியாக இல்லாமல், வியாபாரமாக மாறிவிட்டது. கலையைப் போற்றலாம், கலைஞர்களைப் பாராட்டலாம். ஆனால் நடித்தால் மட்டுமே நாடாளும் தகுதி வந்துவிடும் என்று நாட்டு மக்கள் எண்ணுகிறார்களோ அதுதான் கொடுமையான போக்கு.

போகப்போக ஒரு சமூகம் வளர்ந்து வாழும் என்றுதான் பார்க்கிறோம். ஒப்பனையை அளித்த உடனே அரியணையும் அளிக்கிறோம்.

நடிக்கும்போதும் நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு; நடிப்பதை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்கிறதா?

சீமான்
சீமான்

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், திரை கவர்ச்சியில் மூழ்கியிருக்கும் தமிழ் இனம் விழிப்புற்று எழவேண்டும். தோற்றுப்போன சமூகத்தில் தேவையற்ற செய்திகளை தலைப்புச் செய்திகளாக மாற்ற வேண்டாம்" என்றார்.

சீமான் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவதற்காக வருகை தந்ததால் செய்தியாளர் சந்திப்பை முடிக்குமாறு காவல்துறை கூறியதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பூர்

குடியரசுத் துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், இன்று (அக்டோபர் 28) மற்றும் நாளை (அக்டோபர் 29) என இரண்டு நாட்கள் திருப்பூரில் தங்கி... மேலும் பார்க்க

Tvk Vijay Resort சந்திப்பு: Karur குடும்பங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன? Decode

Tvk Vijay Karur stampedeல் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் என்ன நடந்தது, கரூர் அசம்பாவிதம் நடந்த கடந்த ஒரு மாதத்தில் என்னவெல்லாம் நடந்தது என விளக்க... மேலும் பார்க்க

``AI அமைச்சரின் 83 குழந்தைகள் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதி செய்வார்கள்'' - அல்பேனியா பிரதமர் அதிரடி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா, கடந்த செப்டம்பர் மாதம் உலகின் முதல் ஏ.ஐ. (Artificial Intelligence) அமைச்சரை நியமித்து உலகின் கவனத்தை ஈர்த்தது. ஊழலை ஒழிக்கவும், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும் உர... மேலும் பார்க்க

``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்தவர்கள்; ஆனால் விஜய்'' - கருணாஸ் பேட்டி

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி, உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

கரூர்: 'ஏன் நேரில் வரவில்லை?'- விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்

கரூரில் கடந்த மாதம் 27 -ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் 20 லட்சம் ரூபாய்... மேலும் பார்க்க

தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் & 3 யூனியன் பிரதேசங்களில் SIR; அனைத்து கட்சிகளையும் அழைக்கும் ஸ்டாலின்!

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது.தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கி... மேலும் பார்க்க