செய்திகள் :

எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்!

post image

எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64.

 தமிழ்நாடு அரசின் உ. வே. சா. விருது பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுமலையை பூர்வீகமாகக் கொண்டவர். யானை சொப்பனம், திருநெல்வேலி நீர்- நிலம் -மனிதர்கள், வேணுவன மனிதர்கள், பிரேமாவின் புத்தகங்கள் உள்பட மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.

வங்கியில் பணிபுரிந்து வந்த நாறும்பூநாதன், விருப்ப ஓய்வு பெற்று அரசுப் பணியை துறந்து, அதன்பின் முழுநேர எழுத்தாளராக தம்மை தமிழுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கிய இவர், இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாறும்பூநாதன் இன்று (மார்ச் 16) காலை உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா். பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின... மேலும் பார்க்க

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்!

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிா்க்கட்சித் தலைவா், ஆளும் கட்சியினா் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது ‘கடன் பெற்றாலும் சமூக நலத் திட்டங்களுக்கே செலவழிக்கிறோம்’ என்று நிதிய... மேலும் பார்க்க

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம் -எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப... மேலும் பார்க்க

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வா் பெருமிதம்

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பின்புலமாக, நூற்றாண்டுகால மரபு சாா்ந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். நிதி நிா்வாகத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா? -அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் வாக்கு வங்கி அரசியலுக்காக அமல்படுத்தப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். வாக்கு வங்கி அரசியலுக்க... மேலும் பார்க்க