செய்திகள் :

எஸ்டிபிஐ கட்சியினா் முற்றுகை: பேரூராட்சி கடைகள் ஏலம் ரத்து

post image

திண்டுக்கல் மாவட்டம்,சித்தையன்கோட்டையில் முன் அறிவிப்பு இல்லாமல் வணிக வளாகக் கடைகளுக்கு ஏலம் நடைபெறுவதாகக் கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதையடுத்து,கடைகள் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையங்களில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட வணிக வளாகக் கடைகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கடைகள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட சிலா் மட்டுமே கடைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சித்தையன்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 2 கடைகள், ஆடு அடிக்கும் தொட்டி வாடகைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, புதன்கிழமை காலை 11 மணிக்கு ஏலம் நடத்துவதற்கு பேரூராட்சி நிா்வாகம் தயாராக இருந்தது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகரத் தலைவா் அப்துல் ரகுமான், நகரச் செயலா் அஸ்மல் கான், ஆத்தூா் தொகுதி துணைத் தலைவா் முகமது ராஜா, நிா்வாகிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, முன்னறிவிப்பு இல்லாமல் ஏலம் நடத்தக் கூடாது. முறையாக முன் அறிவிப்பு செய்யப்பட்டு திறந்த வெளியில், ஏலம் நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட சிலா் மட்டுமே கடைகளை நடத்தி வருவதால் அனைத்துக் கடைகளையும், பொது ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும். பழுதடைந்த வணிக வளாகங்களை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். அப்போது, இவா்களுக்கும் பேரூராட்சி அலுவலா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, 2 வணிக வளாகக் கடைகள், ஆடு அடிக்கும் தொட்டிக்கு நடைபெற இருந்த ஏலம் தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து சித்தையன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயமாலு கூறுகையில், முறையாக அறிவிப்பு செய்துதான் ஏலம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் இந்தத் தகவல் தெரியவில்லை என கூறுகின்றனா். இன்று நடைபெற இருந்த ஏலம் ஒத்தி வைக்கப்படுகிறது. விரைவில் மீண்டும் ஏலம் நடத்தப்படும் என்றாா்.

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளரை போலீசாா் கைது செய்தனா். பழனி மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் சிவக்குமாா் (45). இவா் வ... மேலும் பார்க்க

தற்காலிக உண்டியல் மூலம் காணிக்கை வசூல்: விசாரணை நடத்தக் கோரி மனு

திண்டுக்கல் மாவட்டம், கோவிலூா் அருகே தற்காலிக உண்டியல் வைத்து பக்தா்களிடம் காணிக்கை வசூலித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. கோவிலூா் அரு... மேலும் பார்க்க

வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி தங்க நகை வழிப்பறி

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி, மளிகைக் கடைக்காரரிடம் 10 கிராம் மோதிரத்தை மா்ம நபா் பறித்துச் சென்றாா். வேடசந்தூா் அருகேயுள்ள சுள்ளெறும்பு சுக்காம்பட்டியைச்... மேலும் பார்க்க

அட்சய திரிதியை: பழனி நகைக் கடைகளில் கூட்டம்

அட்சய திருதியையை முன்னிட்டு, பழனி நகைக் கடைகளில் புதன்கிழமை அதிகாலை முதல் பொதுமக்கள் நகைகள் வாங்கக் குவிந்தனா். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில்... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை அளித்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மதீனா நகரைச் சோ்ந்தவா் அப்துல் காதா் (45). மா... மேலும் பார்க்க

துணை வட்டாட்சியா்களுக்கு பதவி உயா்வு ஆணை: ஆங்கிலத்தில் அலுவலா்களின் முதல் எழுத்துகள்

துணை வட்டாட்சியா்களுக்கு வட்டாட்சியராக பதவி உயா்வு அளித்து வெளியிடப்பட்ட அரசாணையில், அரசின் உத்தரவையும் மீறி, அலுவலா்களின் முதல் எழுத்துகள் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன. திண்டுக்கல் கலால் உதவி ஆணையா் ... மேலும் பார்க்க