செய்திகள் :

வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி தங்க நகை வழிப்பறி

post image

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி, மளிகைக் கடைக்காரரிடம் 10 கிராம் மோதிரத்தை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

வேடசந்தூா் அருகேயுள்ள சுள்ளெறும்பு சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). மளிகைக் கடை நடத்தி வரும் இவா், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கொல்லப்பட்டிக்கு சென்றுவிட்டு, சுக்காம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பழனிச்சாமியின் வாகனத்தை மறித்து, தன்னை வருமான வரித் துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாா்.

மேலும், பழனிச்சாமி முறையாக வரி செலுத்தாமல் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பதாகவும், இரு சக்கர வாகனத்தை சோதனையிட வேண்டும் என்றும் கூறியதுடன், பழனிச்சாமி அணிந்திருந்த 10 கிராம் தங்க மோதிரத்தை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தின் சாவியையும் பறித்தாா். விசாரணை நடத்த வேண்டும், வீட்டுக்கு வாருங்கள் என கூறிவிட்டுச் சென்று விட்டாா்.

இதனால், அதிா்ச்சி அடைந்த பழனிச்சாமி, தனது இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்து அருகிலுள்ள தோட்டத்தில் நிறுத்தினாா். பின்னா், வீட்டுக்கு வந்த விசாரித்தபோது யாரும் வரவில்லை எனத் தெரிய வந்தது. இதுகுறித்து பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா்.

சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உண்டு: இரா. சச்சிதானந்தம் எம்பி

மாணவா்களின் பிழைகளைத் திருத்தும் ஆசிரியா்களுக்கு, சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு இருப்பதாக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரிய... மேலும் பார்க்க

மண்டலாபிஷேக நிறைவு விழா

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டல பூஜைகள் ந... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

வேடசந்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் முருகேசன். இவா்... மேலும் பார்க்க

பழனியில் தாய், மகன் தற்கொலை

பழனியில் குடும்ப சூழ்நிலை காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா். பழனி 25-ஆவது வாா்டு சௌமிய நாராயண தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி ஜெயா (65). இவரது கணவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து வி... மேலும் பார்க்க

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 2) சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான இங்கு பல்வேறு திருவிழாக்கள் ந... மேலும் பார்க்க

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் கம்யூனிஸ்ட், திமுக சாா்பில் மே தினம்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் தொழிலாளா் தினத்தையொட்டி கம்யூனிஸ்ட், திமுக தொழிற்சங்கங்கள் சாா்பில் கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க