செய்திகள் :

அனுமார் அருளால் செயல்படும் காவல் நிலையம்; வைரலாகும் மத்தியப் பிரதேச காவல் நிலையத்தின் பின்னணி என்ன?

post image

காவல் நிலைய பொறுப்பாளர் அல்லது அதிகாரிகளால் ஒரு காவல் நிலையம் நடத்தப்பட்டு இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தை ஹனுமார் இயக்குவதாக நம்பப்படுகிறது.

இங்கிருக்கும் ஒவ்வொரு காவல் அதிகாரியும் உள்ளூர் மக்களும் இந்த காவல் நிலையம் கடவுள் அருளால் செயல்படுவதாக நம்புகின்றனர். இந்த காவல் நிலையம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள மொகாட் காவல் நிலையம் தான் ஹனுமானால் இயக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

moghat police station
moghat police station

முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அனுமாரை வழிபடும் அதிகாரிகள் மட்டுமே காவல் நிலையத்தில் தங்களது பதவிக் காலத்தை நல்ல முறையில் முடிப்பதாக நம்புகின்றனர்.

இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒவ்வொரு அதிகாரிகளும் இதனைக் கடந்த 40 ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றனர்.

மொகாட் காவல் நிலையமாக இருக்கும் இந்த இடம் ஒரு காலத்தில் தகன மைதானமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த இடத்தில் காவல் நிலையம் கட்டப்பட்ட பிறகுத் தொடர்ச்சியான பிரச்னைகளை அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.

1990-களில் நிலைமை இன்னும் மோசம் அடைந்து அதிகாரிகள் இடைநீக்கம், துறை ரீதியான விசாரணைகளை எதிர்கொள்ளும் அளவுக்குச் சென்றுள்ளது.

இதன் பின்னர் காவல் துறை ஊழியர்கள் இணைந்து காவல் நிலையத்தின் வாயிலில் பஜ்ரங் பலியின் சிலையை (ஹனுமார் சிலை) நிறுவ முடிவு செய்துள்ளனர். இதன் பிறகு குற்றங்கள் குறையத் தொடங்கியதாகவும், நிலைமை மாறியதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தியைக் கொண்டாட இந்த காவல் நிலையத்தில் ஒரு சிறப்பு நிகழ்வும் நடைபெறுகிறது. அதிகாரிகளே பிரசாதம் தயாரித்து வழங்குவார்களாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது... இணையத்தில் வைரலாகும் `1947' அறிவிப்பு!

`இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு செல்கிறீர்களா?' என்று 1947 இல் வெளியான ஒரு அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் இந்திய சுற்றுலா பயணிகள் உட்பட 26... மேலும் பார்க்க

அட்சய திருதியை: பைக்கில் தங்கத்தை டெலிவரி செய்யும் Swiggy Instamart - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஆந்திராவில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஆன்லைன் டெலிவரி நிறுவனம் லாக்கரில் வைத்து தங்கத்தை எடுத்துச் செல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காய்கறி முதல் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரை வாடிக்... மேலும் பார்க்க

``எல்லாமே மாறிவிட்டது'' - 16 வருடத்துக்குப் பிறகு இந்தியா வந்த நபரின் வைரல் வீடியோ!

இங்கிலாந்தைச் சேர்ந்க காண்டன்ட் கிரேயேட்டர் ரால்ஃப் லெங். இவரின் குழந்தைப்பருவம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. அதற்குப் பிறகு சில காரணங்களால் அவர் தன் குடும்பத்துடன் மீண்டும் இங்கிலாந்து சென்றுவிட்டார... மேலும் பார்க்க

புனே விமான நிலையத்திற்குள் வலம்வந்த சிறுத்தை; பதைபதைப்பில் மக்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

புனே விமான நிலையத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து சுற்றிப் பார்த்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.விமான நிலையத்தில் காலை 7 மணிக்குத் தடுப்புச் சுவரில் ஏறிக் குதித்து விமான நிலையத்தி... மேலும் பார்க்க

"என்னோட நிலைமை யாருக்குமே வரக்கூடாது; ஆனாலும்... " - Rahul Tiky மனைவி தேவிகாஶ்ரீ பேட்டி

நகைச்சுவை வசனங்களுக்கு வாயசைப்பது, நகைச்சுவை வீடியோக்களை பதிவுசெய்து சிரிக்க வைப்பது எனப் பிரபலமடைந்த காமெடி யூடியூபர் ராகுல் டிக்கி, சாலை விபத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம், அவரை சமூ... மேலும் பார்க்க

AI Mazu: பக்தர்களுக்கு ஆசி வழங்கும் டிஜிட்டல் தெய்வம்.. மலேசிய தியான்ஹோ கோயிலில் AI வழிபாடு

இன்றைய நவீன உலகில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுகாதாரம், பராமரிப்பு தொடங்கி பொழுதுபோக்கு வரை செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு பெரி... மேலும் பார்க்க