அனுமார் அருளால் செயல்படும் காவல் நிலையம்; வைரலாகும் மத்தியப் பிரதேச காவல் நிலையத்தின் பின்னணி என்ன?
காவல் நிலைய பொறுப்பாளர் அல்லது அதிகாரிகளால் ஒரு காவல் நிலையம் நடத்தப்பட்டு இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தை ஹனுமார் இயக்குவதாக நம்பப்படுகிறது.
இங்கிருக்கும் ஒவ்வொரு காவல் அதிகாரியும் உள்ளூர் மக்களும் இந்த காவல் நிலையம் கடவுள் அருளால் செயல்படுவதாக நம்புகின்றனர். இந்த காவல் நிலையம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள மொகாட் காவல் நிலையம் தான் ஹனுமானால் இயக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அனுமாரை வழிபடும் அதிகாரிகள் மட்டுமே காவல் நிலையத்தில் தங்களது பதவிக் காலத்தை நல்ல முறையில் முடிப்பதாக நம்புகின்றனர்.
இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒவ்வொரு அதிகாரிகளும் இதனைக் கடந்த 40 ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றனர்.
மொகாட் காவல் நிலையமாக இருக்கும் இந்த இடம் ஒரு காலத்தில் தகன மைதானமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இடத்தில் காவல் நிலையம் கட்டப்பட்ட பிறகுத் தொடர்ச்சியான பிரச்னைகளை அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
1990-களில் நிலைமை இன்னும் மோசம் அடைந்து அதிகாரிகள் இடைநீக்கம், துறை ரீதியான விசாரணைகளை எதிர்கொள்ளும் அளவுக்குச் சென்றுள்ளது.
இதன் பின்னர் காவல் துறை ஊழியர்கள் இணைந்து காவல் நிலையத்தின் வாயிலில் பஜ்ரங் பலியின் சிலையை (ஹனுமார் சிலை) நிறுவ முடிவு செய்துள்ளனர். இதன் பிறகு குற்றங்கள் குறையத் தொடங்கியதாகவும், நிலைமை மாறியதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தியைக் கொண்டாட இந்த காவல் நிலையத்தில் ஒரு சிறப்பு நிகழ்வும் நடைபெறுகிறது. அதிகாரிகளே பிரசாதம் தயாரித்து வழங்குவார்களாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb