செய்திகள் :

புனே விமான நிலையத்திற்குள் வலம்வந்த சிறுத்தை; பதைபதைப்பில் மக்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

புனே விமான நிலையத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து சுற்றிப் பார்த்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

விமான நிலையத்தில் காலை 7 மணிக்குத் தடுப்புச் சுவரில் ஏறிக் குதித்து விமான நிலையத்திற்குள் வந்த சிறுத்தை அங்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதியைச் சுற்றிப் பார்த்ததைப் பயணி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்து அதனைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே சிறுத்தை மீண்டும் சாப்பிட எதாவது கிடைக்குமா என்று பார்ப்பதற்காக விமான நிலையத்திற்குள் மீண்டும் வந்து சுற்றிப் பார்த்தது.

விமான ஓடுதளத்தில் இருந்து வெறும் 500 மீட்டர் தூரத்தில் இந்த சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இதையும் பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் பகிர, வீடியோ வைரலானது.

விமான நிலையத்திற்குள் ஏறி குதித்த சிறுத்தை
விமான நிலையத்திற்குள் ஏறி குதித்த சிறுத்தை

சிறுத்தை விமான நிலையத்திற்குள் வந்ததால் விமானச் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் இந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

ஒரே நாளில் இரண்டு முறை விமான நிலையத்திற்குள் நுழைந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரின் உதவியோடு விமான நிலைய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சிறுத்தை விமான நிலையத்திற்குள் எங்காவது பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் விமானங்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிறுத்தை விமான நிலையத்திற்குள் நுழைந்தது தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

புனே விமான நிலையத்தை விமானப்படையும் பயன்படுத்தி வருகிறது. இக்கூட்டத்தில் சிறுத்தையை உடனே பிடிக்க நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இச்சம்பவத்தால் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

அவர்கள் மாலை நேரத்தில் விரைவில் கதவைப் பூட்டிக்கொள்கின்றனர். இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியில் வரப் பயப்படுகின்றனர்.

இது குறித்து விமான நிலையத்திற்குள் அருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ரஞ்சித் ஷிண்ட் கூறுகையில், ''சிறுத்தையின் நடமாட்டத்தால் இரவில் அவசரத்திற்குக்கூட எங்களால் வெளியில் செல்ல முடியவில்லை. சிறுத்தையை உடனே பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"என்னோட நிலைமை யாருக்குமே வரக்கூடாது; ஆனாலும்... " - Rahul Tiky மனைவி தேவிகாஶ்ரீ பேட்டி

நகைச்சுவை வசனங்களுக்கு வாயசைப்பது, நகைச்சுவை வீடியோக்களை பதிவுசெய்து சிரிக்க வைப்பது எனப் பிரபலமடைந்த காமெடி யூடியூபர் ராகுல் டிக்கி, சாலை விபத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம், அவரை சமூ... மேலும் பார்க்க

AI Mazu: பக்தர்களுக்கு ஆசி வழங்கும் டிஜிட்டல் தெய்வம்.. மலேசிய தியான்ஹோ கோயிலில் AI வழிபாடு

இன்றைய நவீன உலகில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுகாதாரம், பராமரிப்பு தொடங்கி பொழுதுபோக்கு வரை செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு பெரி... மேலும் பார்க்க

பத்ம விருதுகள்: ``தனி முத்திரை பதித்த அன்புச் சகோதரர்கள்.." - புகழ்ந்து வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. பல துறைகளிலும் சிறந்து விளங... மேலும் பார்க்க

`ஆடி காரில் பால் வியாபாரம்' - ஹரியானாவை ஆச்சர்யத்தில் வியக்க வைத்த இளைஞன்

பிடித்த வேலையை செய்வதற்காக சிலர் அதிக சம்பளத்தில் இருக்கும் வேலையை கூட ராஜினாமா செய்வதுண்டு. அப்படித்தான் ஹரியானாவில் வாலிபர் ஒருவர் தனக்கு பிடித்த வேலையை செய்யவேண்டும் என்பதற்காக வங்கி வேலையை ராஜினாம... மேலும் பார்க்க

காேவை: `வாடிவாசல் வீரர்கள்' - அசரடித்த ஜல்லிக்கட்டு போட்டி

கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

"எக்ஸ்ட்ரா பன்னீர் தரமாட்டீங்களா?" - மண்டபத்திற்குள் பஸ்ஸை விட்டு ஏற்றியவர் கைது; பின்னணி என்ன?

உத்தரப் பிரதேசத்தில் திருமண சாப்பாட்டில் போதிய அளவு பன்னீர் கொடுக்கவில்லை என்பதற்காக ஒருவர் செய்த காரியத்தால் திருமண மண்டபமே ரத்தக்களரியாகிவிட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள ஹமித்... மேலும் பார்க்க