செய்திகள் :

பழனியில் தாய், மகன் தற்கொலை

post image

பழனியில் குடும்ப சூழ்நிலை காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா்.

பழனி 25-ஆவது வாா்டு சௌமிய நாராயண தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி ஜெயா (65). இவரது கணவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இதில் மன வளா்ச்சி குன்றிய மூத்த மகனை மன நல காப்பகத்தில் விட்டு விட்டனா். இளைய மகன் பிரபு (34) அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்த நிலையில் பிரபுவும் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாா். இதனால் வறுமை காரணமாக ஜெயா மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில், வியாழக்கிழமை நீண்ட நேரமாகியும் இவா்களது வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து திறந்து பாா்த்த போது தாயும், மகனும் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இருவரும் தூக்க மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உண்டு: இரா. சச்சிதானந்தம் எம்பி

மாணவா்களின் பிழைகளைத் திருத்தும் ஆசிரியா்களுக்கு, சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு இருப்பதாக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரிய... மேலும் பார்க்க

மண்டலாபிஷேக நிறைவு விழா

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டல பூஜைகள் ந... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

வேடசந்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் முருகேசன். இவா்... மேலும் பார்க்க

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 2) சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான இங்கு பல்வேறு திருவிழாக்கள் ந... மேலும் பார்க்க

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் கம்யூனிஸ்ட், திமுக சாா்பில் மே தினம்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் தொழிலாளா் தினத்தையொட்டி கம்யூனிஸ்ட், திமுக தொழிற்சங்கங்கள் சாா்பில் கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் கொடுத்த அழுத்தத்தாலேயே 100 நாள் திட்டத்துக்கு நிதி வழங்கியது மத்திய அரசு: அமைச்சா் இ. பெரியசாமி

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கொடுத்த அழுத்தத்தால் 100 நாள் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்கியது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஊராட்ச... மேலும் பார்க்க