செய்திகள் :

நாட்றம்பள்ளி: வனப்பகுதியில் விட்ட கரடி வனத்துறையினரை தாக்க முயற்சி

post image

நாட்றம்பள்ளி அருகே பிடிபட்ட கரடியை வனப்பகுதியில் விட்ட போது அது வனத்துக்குள் ஓடாமல், மீண்டும் வனத்துறை ஜீப் மீது ஏறி வனத்துறையினரைத் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே மேல்மாமுடி மானப்பள்ளியில் உள்ள விவசாய நிலத்திற்குள் இரண்டு குட்டி கரடிகளுடன் தாய் கரடி, ஒரு ஆண் கரடி என நான்கு கரடிகள் தண்ணீர் தேடி வந்த போது அங்கு தண்ணீர் குடித்து விட்டு ஆண் கரடி மற்றும் இரண்டு குட்டி கரடிகள் கொத்தூர் காப்பு காட்டிற்கு உள்ளே சென்றுவிட்டன. ஆனால் ஒரு தாய் கரடி மட்டும் வழிதவறி பேட்டராயன் வட்டம் பகுதியில் புகுந்து மணிமேகலை என்ற பெண்ணை தாக்கிவிட்டு அங்குள்ள ராமி என்பவரின் வீட்டின் சுற்றுச் சுவர் மீது ஏறி குதித்து பூச்செடிக்குள் தஞ்சம் அடைந்தது.

பின்னர் இது குறித்து அறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் வனச் சரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கரடி வனத்துறையினர் விரித்த வலையில் சிக்கியது.

வலையில் சிக்கிய கரடியை கூண்டுக்குள் அடைத்து ஓசூர் வனக்கோட்ட கால்நடை மருத்துவர் ஜெயசந்திரன் என்பவரை வரவழைத்து கரடியை பரிசோதனை செய்து ஏற்கனவே 3 கரடிகள் சென்ற கொத்தூர் காப்பு காட்டில் விட்டனர்.

அப்போது அந்தக் கரடி வனப்பகுதிக்குள் செல்ல வழி தெரியாமல் மீண்டும் வனத்துறையினர் நின்று கொண்டிருந்த பக்கம் திரும்பி வந்து வனத்துறை ஜீப் மீது பாய்ந்து அவர்களை தாக்க முயன்றது. இதனைப் பார்த்த வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக வனத்துறையினர் வாகனங்களில் ஹாரன் சப்தம் எழுப்பியும் கூச்சல் போட்டதால் கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

சென்னை சென்ட்ரல் - பகத் கி கோத்தி ரயில் சேவை இன்று தொடக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி ரயில்நிலையத்துக்கு விரைவு ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை (மே 3) காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பத... மேலும் பார்க்க

ஜூலை மாதத்துக்குள் 3,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் 2,880 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை வரும் ஜூலை மாதத்துக்குள் 3 ஆயிரமாக உயரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் நடத்த வேண்டும்: அமைச்சா் உத்தரவு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது, ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் நிலையான இயக்க நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகள் நலனுக்கு எதிரானது: அங்கன்வாடி ஊழியா்களுக்கு அமைச்சா் எச்சரிக்கை

உணவு வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகளின் நலனுக்கு எதிரானது என்று அங்கன்வாடி ஊழியா்களை சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் எச்சரித்துள்ளாா். கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்கக் கோரி அ... மேலும் பார்க்க

விளம்பரம் வெளியிடும் வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை: பாா்கவுன்சில் எச்சரிக்கை

வழக்குரைஞா்கள் பொது இடங்கள், சமூக வலைதளங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரம் (வருவாய் நோக்கத்தில்) வெளியிட்டால் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகம் மற்றும் புதுச்ச... மேலும் பார்க்க