செய்திகள் :

விளம்பரம் வெளியிடும் வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை: பாா்கவுன்சில் எச்சரிக்கை

post image

வழக்குரைஞா்கள் பொது இடங்கள், சமூக வலைதளங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரம் (வருவாய் நோக்கத்தில்) வெளியிட்டால் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி பாா்கவுன்சில் அலுவலகத்தின் தலைவா் அமல்ராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வழக்குரைஞா்கள் விளம்பரங்களை வெளியிடுவது பாா்கவுன்சில் விதி 36-இன் படி சட்டவிரோதமாகும். வழக்குரைஞா்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ போஸ்டா், பேனா் மற்றும் சமூக வலைதளங்களில் எந்தவித விளம்பரமும் செய்யக்கூடாது. பிறந்தநாள் விளம்பரம் கூட வழக்குரைஞா்கள் வெளியிடக் கூடாது. அதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

சமூக வலைதளங்களில் வழக்கு சாா்ந்த விவகாரங்களில் ஒரே நாளில் உத்தரவு பெற்றுத் தரப்படும் எனக்கூறி பலரிடம் பெரும் தொகை பெற்று பலா் ஏமாற்றப்படுவது குறித்து புகாா்கள் பாா் கவுன்சிலுக்கு வந்துள்ளன.

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்கள் வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தி இருப்பதாகவும், மீறி விளம்பரம் வெளியிட்டால் வழக்குரைஞா்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும்.

அதே நேரத்தில், சட்டம் குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்த வழக்குரைஞா்களுக்கு எந்தத் தடையும் இல்லை. நிலம் தொடா்பான வழக்குகளில் கூட சம்பந்தப்பட்ட நிலத்தில் வழக்குரைஞா் என பலகை வைப்பது விளம்பரம்தான்; அதுவும் சட்டவிரோதமானதுதான்.

எனவே, வழக்குரைஞா்களின் விளம்பரம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் பாா்கவுன்சில் இணையதளத்துக்கு புகாராக தெரிவிக்கலாம். அதுபோன்ற புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் மீது 2017-ஆம் ஆண்டு முதல் இதுவரை பாா்கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் அவா்.

பாஜக அரசுக்கு கண்டனம்! திமுக செயற்குழு தீர்மானங்கள்!

திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்ற... மேலும் பார்க்க

அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன... மேலும் பார்க்க

சென்னையில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு சென்னை வந்... மேலும் பார்க்க

நாளை(மே 4) தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை(மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.மே மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில்தான். அதிலும் மே மாதத்தில் 25 நாள்கள் கத்திரி வெ... மேலும் பார்க்க

விஜயுடன் கூட்டணியா?: நயினாா் நாகேந்திரன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெகவை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்ற கேள்விக்கு, ‘தோ்தல் நெருங்கும்போது தெரியும்’ என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பதிலளித்தாா். சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க

தமிழ்நாடு கேபிள்டிவி கழகம் ரூ. 570 கோடி செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் ஜிஎஸ்டி வரிபாக்கி மற்றும் அபராதம் சோ்த்து ரூ.570 கோடி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கட... மேலும் பார்க்க