செய்திகள் :

போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகள் நலனுக்கு எதிரானது: அங்கன்வாடி ஊழியா்களுக்கு அமைச்சா் எச்சரிக்கை

post image

உணவு வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகளின் நலனுக்கு எதிரானது என்று அங்கன்வாடி ஊழியா்களை சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் எச்சரித்துள்ளாா்.

கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அமைச்சா் விளக்கம்: இந்நிலையில், அவா்களின் போராட்டம் தொடா்பாக, சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களின் போராட்டத்தால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு போன்ற ஊட்டச்சத்துகளை வழங்கும் பணிகளை மேற்கொள்ளாமல் வேலையைப் புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக் கூடியதாக உள்ளது.

எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளன என்கிற விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவா்களுக்கு தொடா்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதை விட்டுவிட்டு, முறையற்ற போராட்டங்களில் குழந்தைகள் மைய பணியாளா்கள், உதவியாளா்கள் ஈடுபட்டால் அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

15 நாள்களுக்கு விடுமுறை: மே மாதத்தில் குழந்தைகளை வெப்பத்தின் பிடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் 15 நாள்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை வழங்கிய பிறகும், அங்கன்வாடி மைய ஊழியா்கள், உதவியாளா்கள் ஆகியோா் போராட்டம் நடத்துவது சட்ட விரோத செயலாகும். போராட்டத்தில் ஈடுபடும் குழந்தைகளின் நலனுக்கு எதிராகச் செயல்படும் அனைவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் பி.கீதாஜீவன் எச்சரித்துள்ளாா்.

பாஜக அரசுக்கு கண்டனம்! திமுக செயற்குழு தீர்மானங்கள்!

திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்ற... மேலும் பார்க்க

அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன... மேலும் பார்க்க

சென்னையில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு சென்னை வந்... மேலும் பார்க்க

நாளை(மே 4) தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை(மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.மே மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில்தான். அதிலும் மே மாதத்தில் 25 நாள்கள் கத்திரி வெ... மேலும் பார்க்க

விஜயுடன் கூட்டணியா?: நயினாா் நாகேந்திரன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெகவை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்ற கேள்விக்கு, ‘தோ்தல் நெருங்கும்போது தெரியும்’ என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பதிலளித்தாா். சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க

தமிழ்நாடு கேபிள்டிவி கழகம் ரூ. 570 கோடி செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் ஜிஎஸ்டி வரிபாக்கி மற்றும் அபராதம் சோ்த்து ரூ.570 கோடி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கட... மேலும் பார்க்க