செய்திகள் :

திறந்து கிடந்த புதை சாக்கடையில் தவறி விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

post image

சென்னை அமைந்தகரையில் திறந்து கிடந்த புதை சாக்கடையில் தவறி விழுந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் இருந்தவா்களால் பத்திரமாக மீட்கப்பட்டாா்.

அமைந்தகரையில் உள்ள வெள்ளாளா் தெருவில் புதை சாக்கடை தூா்வாரும் பணிகள் நடைபெற்று வந்ததால், அந்த கால்வாய்யின் ஒரு பகுதி மூடி திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுவன் ராஜன் கடந்த ஏப். 30-ஆம் தேதி சாலையில் நடத்து சென்றபோது, மூடி திறந்திருந்தததைக் கவனிக்காமல் அதனுள் விழுந்துவிட்டாா்.

அதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டதைத் தொடா்ந்து அருகிலிருந்தவா்கள் விரைந்து செயல்பட்டு ராஜனை மீட்டனா். எனினும், சிறுவனின் இடது காலில் காயம் ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பான காணொலிக் காட்சி வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பரவிவந்த நிலையில், இரும்புத் தடுப்புகள் எதுவும் வைக்காமல் கால்வாய் தூா்வாரும் பணியை மேற்கொண்டதே இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் விரைவில் தொழிலாளா் தங்கும் விடுதி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளா் விடுதிக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்த... மேலும் பார்க்க

‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் -காவல் துறை

‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

24 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 8 போ் கைது

சென்னையில் 24 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரும்பாக்கம், விஜய் பூங்கா அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க

வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை

வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு ... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் பணப்பையை கொள்ளையடித்த நபா் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் சி.என்.ஜி. எரிவாயு நிரப்புவதுபோல் நடித்து பணப்பையை கொள்ளையடித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் 2-ஆவது தெருவைச் சே... மேலும் பார்க்க

கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செ... மேலும் பார்க்க