செய்திகள் :

இனி பிரதமருக்கு உறக்கமில்லாத இரவுகள்: வேணுகோபால்

post image

பலரின் உறக்கத்தைக் கெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இனி உறக்கமில்லாத இரவுகள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,

சமீபத்தில் அங்கீகரிப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பைச் செயல்படுத்துவதில் பிரதமர் மோடிக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்படும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைப் போலவே, பிரதமரும் அவரது அமைச்சரவையும் இதைத் தொடர அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக 50 சதவீத உச்சவரம்பை அதிகரிப்பதில் மத்திய அரசுக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிரதமர் ஒப்புக்கொண்டதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்தியா கூட்டணி நிம்மதியாக உறங்குவோம், ஆனால் பிரதமர் மோடிக்கு இனி உறக்கமிக்லலாத இரவுகள் என்று அவர் தெரிவித்தார்.

கேரளத்தில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கேரள அமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் எம்பி சசி தரூர், கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், மத்திய அரசு மாநில அரசினுடைய ஒத்துழைப்புடன் சாகர் மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களுடைய உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. அதன்காரணமாக துறைமுகத்தின் இணைப்பும் அதிகரித்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் இந்தியா கூட்டணியின் வலுவான தூண் என்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஒரே மேடையில் இருப்பது பலரின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறது என்று கூறினார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்ததையடுத்து பிரதமர் மோடியின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, ஏப்ரல் 30 அன்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார்.

உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் கொண்டுவந்த 2024-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்... மேலும் பார்க்க

1.45 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த மாா்ச் மாதத்தில் 1.45 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடா்பு: என்ஐஏ

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடா்பிருப்பதாக என்ஐஏ நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பஹல்காமில் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் போா்ப் பதற்றம்: ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் விரைவில் கூட வாய்ப்பு’

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், அதுகுறித்து ஆலோசித்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) கூ... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கி துணை ஆளுநா்களின் துறைகள் மாற்றம்

துணை ஆளுநா்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை மாற்றியது. அண்மையில் ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக நியமிக்கப்பட்ட பூனம் குப்தா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து தற... மேலும் பார்க்க

ரூ. 6,266 கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள்: ஆா்பிஐ-க்கு திரும்பவில்லை

ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவத... மேலும் பார்க்க