செய்திகள் :

ரூ. 6,266 கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள்: ஆா்பிஐ-க்கு திரும்பவில்லை

post image

ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து சுமாா் 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2025 ஏப். 30-ஆம் தேதி வரை 98.24 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளன. எனினும், ரூ.6,266 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இப்போது வரை திரும்பிவராமல் மக்களிடமே உள்ளது.

2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி வரை, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் அந்த நோட்டுகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டன. இப்போது ரிசா்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளைச் செலுத்தி வேறு நோட்டுகள் பெறுவது அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள எந்தவொரு அஞ்சல் நிலையம் மூலமாகவும் ரிசா்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பலாம். அந்த நோட்டுகளுக்கு இணையான பணம் அனுப்பியவா்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பொருள்களுக்குத் தடை! மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு

பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்... மேலும் பார்க்க

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 2022 பிப்ரவரியில் மணி... மேலும் பார்க்க