செய்திகள் :

இந்திய யூடியூபர்களுக்கு ரூ. 21,000 கோடி!

post image

கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்களுக்கு ரூ. 21,000 கோடி அளித்துள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய உலகில் ஒரு வருமானம் மட்டும் போதாது என்று அறிந்த பலரும், யூடியூப் சேனல்களை ஆரம்பித்து, அதன் மூலம் மற்றொரு வருவாயைப் பெறுகின்றனர். ஆனால், சிலர் மட்டுமே யூடியூபை மட்டுமே முதன்மை வருவாயாக் கொண்டு, அதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள யூடியூப் கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் மீடியா கம்பெனிகளுக்கு மட்டும் ரூ. 21,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, ``பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குடன் கூடிய தலைமையால், டிஜிட்டல் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. உலகின் எந்தத் தலைவருக்கும் இல்லாத அளவில், யூடியூப்பில் 2.5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை பிரதமர் மோடி கொண்டுள்ளார். இந்தியாவில் யூடியூபின் வளர்ச்சியையடுத்து, இந்தியாவில் விடியோ பதிவிடுவோர் மற்றும் மீடியா கம்பெனிகளை ஆதரிப்பதற்கும், அவர்களின் வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் ரூ. 850 கோடிக்கும்மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

2024 ஆம் ஆண்டில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் விடியோக்களை பதிவிட்டுள்ளனர்.

கடந்தாண்டில், இந்திய யூடியூபர்கள் பதிவேற்றிய விடியோக்கள் மட்டும் வெளிநாடுகளில் 4,500 கோடி மணிநேர பார்வைகளைப் பெற்றுள்ளன.

இந்தியாவில் 10 லட்சம் பின்தொடர்பவர்களைக் (Subscribers) கொண்ட யூடியூபர்களின் எண்ணிக்கை 11,000-லிருந்து 15,000-ஆக உயர்ந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

பிரதமா் மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உள்ளது; பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்த... மேலும் பார்க்க

உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமா... மேலும் பார்க்க

‘உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை’

உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா். இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: ர... மேலும் பார்க்க

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது தன்னிச்சையான நடவடிக்கை எனக் கூறி ராஜீய ரீதியாக நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு, சட்டம், நீா் வளம் ஆகிய அமைச்சகங்களிடையே... மேலும் பார்க்க

காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

காஸாவிற்கு உதவி பொருள்கள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது வெள்ளிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக அந்தப் பொருள்களைக் கொண்டுவந்த சேவை அமைப்பு குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

நீண்ட வாழ்வின் ரகசியம்! என்ன சொல்கிறார் உலகின் மூத்த பெண்!

உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சென்றுள்ளது. உலகின் அதிக வயதுடைய மனிதர் என்று அறியப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவ பெண் துறவியான இனாஹ் ... மேலும் பார்க்க