செய்திகள் :

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு

post image

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது தன்னிச்சையான நடவடிக்கை எனக் கூறி ராஜீய ரீதியாக நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு, சட்டம், நீா் வளம் ஆகிய அமைச்சகங்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

அதில், ‘இந்தியாவின் தன்னிச்சையான நடவடிக்கை குறித்து சட்ட ரீதியாகவும், அரசமைப்பு ரீதியாகவும் பாகிஸ்தான் ஆலோசனை நடத்தியது. இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான பூா்வாங்க பணிகள் முடிவு பெற்றுள்ளன.

மேலும், வரவாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கான உறுதியான காரணங்களை இந்தியா வழங்கவும் இந்த நோட்டீஸில் வலியுறுத்தப்படும். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நீா் ஆக்கிரமிப்பு பிரச்னை குறித்து சா்வதேச சமூகத்திடமும் முறையிடப்படும்.

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு சட்ட ரீதியாக உரிமை உள்ளது. இந்தியாவின் முடிவை திரும்ப பெற வைக்க இந்த முடிவுகள் பலனளிக்கும் என பாகிஸ்தான் நம்புகிறது. பாகிஸ்தான் அமைச்சரவையின் அனுமதி பெற்று இந்த நோட்டீஸ் அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்.22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 26 போ் உயிரிழந்ததையடுத்து சிந்து நிதி ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டது.

போப் உடையில் டிரம்ப்! - வைரலாகும் புகைப்படம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவிருக்கிறாா். யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்பு ரகசியமல்ல: பிலாவல் புட்டோ

‘பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பை ரகசியமானதாக கருதவில்லை’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தாா். இந்தியாவுக்க... மேலும் பார்க்க

பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் கோரிக்கை

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தாா். பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உள்ளது; பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்த... மேலும் பார்க்க