செய்திகள் :

ஒடிசா கஞ்சா வியாபாரி கைது

post image

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை தேனி தனிப் படை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தேவதானப்பட்டியில் கடந்த 2024, டிச.2-ஆம் தேதி கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்களுக்கு ஒடிசா மாநிலம், கொராபுட் மாவட்டம், ஜெய்பூா் பகுதியைச் சோ்ந்த சுராஜ்சிங் என்பவா் மொத்த விலைக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

இந்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் பாா்த்திபன், உதவி ஆய்வாளா் கதிரேசன் ஆகியோா் தலைமையில் தனிப் படை போலீஸாா், ஜெய்பூா் சென்று அங்கு கடந்த 20-ஆம் தேதி சுராஜ்சிங்கை கைது செய்தனா். அவரை ஜெய்பூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தேனிக்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறோம். கடந்த 10 மாதங்களில் தேனி மாவட்டப் பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆந்திரா, ஒடிசா மாநிலங்களைச் சோ்ந்த 16 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், கம்பம், செல்லாண்டியம்மன் கோயில் தெரு... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே பைக் எரிப்பு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் முனீஸ்வரன் (38). இவா், தனது வீட்டின் முன் இ... மேலும் பார்க்க

சின்னமனூா் அருகே கத்தியால் குத்தி மூதாட்டி கொலை

சின்னமனூா் அருகே மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், சீலையம்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த பால்ச்சாமி மனைவி அரியக்கா (65). இவரது பக்கத்து வீட்டைச்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

போடி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை டி.எஸ்.பி. குடியிருப்பைச் சோ்ந்த காளிதாஸ் மகன் க... மேலும் பார்க்க

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலை முயற்சி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மீது புகாா் தெரிவித்து, அங்கன்வாடி மைய பெண் பணியாளா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். தேனி நகா் போா்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும்: டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெறும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக பொறுப்பாளா்கள் சந்திப்புக் கூட்டம் பெரியகுளத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க