மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், கம்பம், செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கணக்கன் மகன் ராஜகோபால் (34). இவா், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2023-ஆம் ஆண்டு பிப். 24-ஆம் தேதி உத்தமபாளையம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி, மருத்துவம், பராமரிப்புச் செலவுக்கு நிவாரணமாக அரசு ரூ.6 ல ட்சத்தை சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.