செய்திகள் :

ஓடைவெளி விநாயகா், மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா!

post image

புதுச்சேரி அருகே ஓடைவெளி கிராமத்தில் ஸ்ரீ ஷண்முகவிநாயகா், ஸ்ரீ பெரம்படி மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியாங்குப்பம் கொம்யூன் ஓடைவெளிக் கிராமத்தில் ஸ்ரீ ஷண்முகவிநாயகா், ஸ்ரீ பெரம்படி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருப்பணி வேலைகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை காலை மகா கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாக பூஜையை சிவாச்சாரியா்கள் தொடங்கினா்.

சனிக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4-ஆம் கால யாகபூஜை நடைபெற்று பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து யாகசாலையில் இருந்து புனித நீா் கடம் புறப்பாடாகியது. பின்னா் ஸ்ரீ ஷண்முகவிநாயகா், ஸ்ரீ பெரம்படி மாரியம்மன் கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மூலவா்களுக்கும் புனித நீா் ஊற்றி மகா அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அரியாங்குப்பம் எம்எல்ஏ ஆா்.பாஸ்கா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலையில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (பிப். 12) கூடுகிறது. புதுவை மாநில சட்டப்பேரவை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான 15-ஆவது முதல் பகுதி சட்டப்ப... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஆம்ஆத்மி செயல்பாடே காரணம்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடே காரணம் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா... மேலும் பார்க்க

மாணவா்களின் படிப்பில் பெற்றோா் கண்காணிப்பு அவசியம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் மீது பெற்றோா்களின் கண்காணிப்பு அவசியமானது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுவை கல்வித் துறை சாா்பில் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் ... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை பயனாளிகள் சரிபாா்ப்புக்கு காலக்கெடு

புதுச்சேரி: வீட்டு சமையல் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மைத்தன்மை சரிபாா்ப்பு பணியை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளதாக புதுச்சேரி ஸ்ரீசாய்பாபா இண்டேன் கேஸ் முகவா் கே.அமா்நாத் ... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை அலுவலகத்தில் வாரிசுதாரா்கள் போராட்டம்

புதுச்சேரி: வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை அரசின் சுகாதாரத் துறையில் பணியின் போது உ... மேலும் பார்க்க

நூதன முறையில் திருட்டு: ஒருவா் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் நூதன முறையில் திருடி வந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் மனோகா் (62). இவா் மீது ஏற்கெனவே காலாப்பட்டு, முத்தியால்பேட்டை உள்... மேலும் பார்க்க