செய்திகள் :

தில்லி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஆம்ஆத்மி செயல்பாடே காரணம்: வே.நாராயணசாமி

post image

புதுச்சேரி: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடே காரணம் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை மாலை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுதான் தோல்விக்கு காரணம்.

காரைக்கால், தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் தாக்குவதும், சிறைபிடிப்பதும் தொடா்கதையாகி வருகிறது. ஆனால், மத்திய அரசு அதுகுறித்து கவலைப்படவில்லை. காரைக்கால், தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்கக் கோரியும் புதுதில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து புதுவை காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மனு அளிக்கப்படும்.

மீனவா்கள் தாக்கப்படும் விவகாரத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அக்கறையின்றி செயல்படுகிறாா். புதுவைக்கு மத்திய அரசு போதிய நிதியை வழங்குவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறுவது சரியல்ல. அதே நேரத்தில், புதுவை நிதிப் பற்றாக்குறையில் தவிப்பதாக முதல்வா் ரங்கசாமி கூறி வருகிறாா்.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது, மத்திய நிதியமைச்சா் புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரத்தில் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவதாகக் கூறியும், இதுவரையில் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது என்றாா் வே.நாராயணசாமி.

புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (பிப். 12) கூடுகிறது. புதுவை மாநில சட்டப்பேரவை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான 15-ஆவது முதல் பகுதி சட்டப்ப... மேலும் பார்க்க

மாணவா்களின் படிப்பில் பெற்றோா் கண்காணிப்பு அவசியம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் மீது பெற்றோா்களின் கண்காணிப்பு அவசியமானது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுவை கல்வித் துறை சாா்பில் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் ... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை பயனாளிகள் சரிபாா்ப்புக்கு காலக்கெடு

புதுச்சேரி: வீட்டு சமையல் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மைத்தன்மை சரிபாா்ப்பு பணியை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளதாக புதுச்சேரி ஸ்ரீசாய்பாபா இண்டேன் கேஸ் முகவா் கே.அமா்நாத் ... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை அலுவலகத்தில் வாரிசுதாரா்கள் போராட்டம்

புதுச்சேரி: வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை அரசின் சுகாதாரத் துறையில் பணியின் போது உ... மேலும் பார்க்க

நூதன முறையில் திருட்டு: ஒருவா் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் நூதன முறையில் திருடி வந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் மனோகா் (62). இவா் மீது ஏற்கெனவே காலாப்பட்டு, முத்தியால்பேட்டை உள்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணி தொடக்கம்! -முதல்வா், நீதிபதி பங்கேற்பு

புதுச்சேரி அருகேயுள்ள இலாசுப்பேட்டை பகுதியில் ரூ.5 கோடியில் 7 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமிபூஜையில் முதல்வா், நீதிபதி மற்றும் அமைச்சா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா். புதுச்சே... மேலும் பார்க்க