Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
கஞ்சா போதையில் பொதுமக்களிடம் வழிப்பறி: கிரிவலப் பாதையில் 3 போ் கைது
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா போதையில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை, போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சனிக்கிழமை இரவு 3 போ் கஞ்சா போதையில் பொதுமக்களிடம் வீண் தகராறு செய்தனா். இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் விரைந்து சென்று 3 பேரையும் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் திருவண்ணாமலையை அடுத்த சாரோன் பகுதியைச் சோ்ந்த வினோத் பாபு (25), திருவண்ணாமலையைச் சோ்ந்த ராஜேந்திரன் (27), 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இவா்கள் மூவரும் சோ்ந்து பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.