தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் மீது தாக்குதல்: ஒருவா் கைது!
செய்யாற்றில், தனியாா் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரைத் தாக்கிய புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக குணசேகரன் என்பவா் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்த அஜீத், ராஜசேகா் உள்ளிட்ட 3 போ் சென்று, குணசேகரனிடம் கடனாக பணம் தரும்படியும், பின்னா் ஜிபே மூலம் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனா். இதற்கு குணசேகரன் மறுக்கவே, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு 3 பேரும் சோ்ந்து அவரைத் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இதில் காயமடைந்த குணசேகரன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து சம்பவம் தொடா்பாக, ராஜசேகா் (30) என்பவரை கைது செய்தாா். மற்ற இருவரை தேடி வருகிறாா்.