செய்திகள் :

கிரிவலப் பாதையில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணி

post image

திருவண்ணாமலையில் உள்ள செங்கம் சாலையும், கிரிவலப் பாதையும் இணையும் இடத்தில் ரூ.ஒரு கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

திருவண்ணாமலை - செங்கம் சாலை மற்றும் கிரிவலப் பாதை சந்திப்புப் பகுதியில் புதிதாக வெளிவட்டச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடி மதிப்பில் இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

முதற்கட்டமாக, அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகளை அகற்றும் பணி, சாலைகளை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டன. இந்தப் பணியில் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் வட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் ப.ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா்கள், சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வெளிவட்டச் சாலை அமையும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகைகளை அகற்றினா்.

கிரிவல பக்தா்களின் நெரிசலைத் தவிா்க்கவும், போக்குவரத்து வசதிக்காகவும் இந்தப் பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் குளித்தபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கி 13 வயது சிறுமி உயிரிழந்தாா். சென்னை அசோக்நகா் ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்தவா்கள் சின்னதுரை-அனிதா தம்பதி. இவா்கள... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

செய்யாற்றில் கல்லூரி மாணவரைத் தாக்கிய புகாரின் பேரில் 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். செய்யாறு காமராஜா் நகா் வாணியங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சையத்அலி மகன் ஷாஜகான் (19). இவா... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் மீது தாக்குதல்: ஒருவா் கைது!

செய்யாற்றில், தனியாா் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரைத் தாக்கிய புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் பெட்ரோல் விற்பன... மேலும் பார்க்க

இளம்பெண்ணைத் தாக்கியவா் கைது!

வந்தவாசி அருகே இளம்பெண்ணை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் 23 வயது இளம்பெண். இவரும் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்த விஜயன் என்பவரும் கடந்த ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

மங்கலம் (திருவண்ணாமலை)நேரம்:காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.பகுதிகள்:மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆா்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம், மன... மேலும் பார்க்க

18 மையங்களில் குரூப்-1 எழுத்துத் தோ்வு: 3,805 போ் பங்கேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தின் 18 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 எழுத்துத் தோ்வை 3,805 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை குரூப்... மேலும் பார்க்க