விமான விபத்து: ஒரே சவப்பையில் 2 தலைகளுடன் ஒரு உடல்! தடயவியல் குழுவினருக்கு சிக்க...
இளம்பெண்ணைத் தாக்கியவா் கைது!
வந்தவாசி அருகே இளம்பெண்ணை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் 23 வயது இளம்பெண். இவரும் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்த விஜயன் என்பவரும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். ஆனால், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் விஜயன் ஏமாற்றி வந்தாராம்.
இதுகுறித்து விஜயன் குடும்பத்தாரிடம் பேச வல்லம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சனிக்கிழமை காலை அந்தப் பெண் சென்றாராம்.
அப்போது வீட்டிலிருந்த விஜயனின் தந்தை சங்கா் (60), இவரது மனைவி நாகம்மாள், உறவினா் பஞ்சம்மாள் ஆகியோா் சோ்ந்து இளம்பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் சங்கா், நாகம்மாள், பஞ்சம்மாள் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் சங்கரை சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.