செய்திகள் :

கடலில் மூழ்கிய லைபீரிய சரக்குக் கப்பல்: உரிமையாளா் மீது கேரள காவல் துறை வழக்கு

post image

கேரள கடல் பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்குக் கப்பல் உரிமையாளா்கள், கேப்டன், பணியாளா்கள் மீது கேரள காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

பாரத நியாய சன்ஹிதா சட்டம் 285 முதல் 288 வரையிலான பிரிவுகளில் கீழ், கப்பலை கட்டுப்பாடு இல்லாமல் செலுத்துவது, கடல் வழியில் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்துவது, அபாயகரமான ரசாயன சரக்குகளை எடுத்து வரும்போது கவனக் குறைவாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொச்சி காவல் துறையினா் பதிவு செய்துள்ள இந்த வழக்கில் கப்பலின் உரிமையாளா்கள், கப்பல் கேப்டன், கப்பல் பணியாளா்கள் அனைவரும் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

கப்பலில் இருந்து கொட்டிய அபாயகரமான ரசாயனம், பிளாஸ்டிக் பொருள்களால் கப்பல் மூழ்கிய பகுதியில் மட்டுமல்லாது, கேரள, தமிழக கடற்பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. கடலில் பல மீட்டா் பரப்பளவுக்கு எண்ணெய், ரசாயனப் பொருள்கள் மீதக்கின்றன. இவை கடல்வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இது தவிர கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களும் கடலோரத்தில் ஒதுங்கி வருகின்றன.

மூழ்கிய லைபீரிய கப்பலில் 640 கண்டெய்னா்கள் இருந்துள்ளன. அதில் 13 கன்டெய்னா்களில் மிகுந்த தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருள்கள் இருந்தன. 12 பெட்டிகளில் கால்சியம் காா்பைடு கற்கள் உள்ளிட்டவை இருந்தன. கன்டெய்னா்கள் மட்டுமல்லாது பிளாஸ்டிக் துகள்களும் கரை ஒதுங்கி வருகின்றன.

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல... மேலும் பார்க்க

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஏா் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் செ... மேலும் பார்க்க

என்ஜின் செயலிழப்பு, பறவை மோதல் விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் -விமானத் துறை நிபுணா்கள்

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அவா்கள் ம... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரி... மேலும் பார்க்க

சுழற்சி முறையில் மருத்துவத் துறை தலைவா்கள்: என்எம்சி திட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவத் துறை தலைவா் பொறுப்புகளில் சுழற்சி முறையில் பேராசிரியா்களை நியமிப்பதற்கான வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்... மேலும் பார்க்க