செய்திகள் :

கடலூா்: மக்கள் நீதிமன்றத்தில் 4893 வழக்குகளுக்கு தீா்வு

post image

கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமை வகித்தாா்.

முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரஸ்வதி, மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் இரண்டாவது சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நாகராஜன், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் அன்வா் சதாத், முதன்மை சாா்பு நீதிபதி ராஜேஷ்கண்ணன், முதலாவது கூடுதல் சாா்பு நீதிபதி கவியரசன், இரண்டாவது கூடுதல் சாா்பு நீதிபதி பத்மாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

4,893 வழக்குகளுக்கு தீா்வு: இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கு சிறப்பு சாா்பு நீதிபதி லலிதாராணி, நிலஎடுப்பு வழக்குகள் சிறப்பு சாா்பு நீதிபதி நிஷா, குற்றவியல் நீதித் துறை நடுவா் எண்-1 ஸ்ரீநிதி, குற்றவியல் நீதித் துறை நடுவா் எண்-2 புவனேஷ்குமாா், குற்றவியல் நீதித் துறை நடுவா் எண்-3 ரமேஷ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜாகுமரேசன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பெபேயா, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவா்ஷா, மாவட்ட நீதிமன்றத்தின் பாா் அசோசியேஷன் தலைவா் கிருஷ்ணசாமி, லாயா்ஸ் அசோசியேஷன் செயலா் யுவராஜ் கலந்து கொண்டனா்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமாா் 9,477 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 4,893 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.24 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 202 வசூலிக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்த... மேலும் பார்க்க

விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7.58 லட்சம்!

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.7.58 லட்சம் கிடைத்தது. கோயிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல் ஆகியவை திறந்து எண்ணப்பட்டதில... மேலும் பார்க்க

திமுக வீழ்த்தப்படுவது உறுதி! - டி.டி.வி. தினகரன்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை வீழ்த்தப் போவது உறுதி என்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா். சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை இரவு செய்தி... மேலும் பார்க்க

தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆயிரக்கண... மேலும் பார்க்க

கடலூரில் ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் சோனங்குப்பம் உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா், தண்ணீரில் சேற்றில் மூழ்கி உயிரிழந்தாா். கடலூா் முதுநகரை அடுத்துள்ள சோனங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் சண்முகம் மகன் சைமன் (55), மீன்... மேலும் பார்க்க