குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு
கடலூா் முதுநகா் சோனங்குப்பம் உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா், தண்ணீரில் சேற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
கடலூா் முதுநகரை அடுத்துள்ள சோனங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் சண்முகம் மகன் சைமன் (55), மீன் பிடிக்கும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனா்.
இவா் வெள்ளிக்கிழமை காலை சோனங்குப்பம் உப்பனாற்றில் படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றில் தவறி விழுந்து சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த கடலூா் துறைமுகம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, சைமன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.