கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோண்டூா் ஜோதி நகா் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவா் மருதவாணன், தலைவா் பாலு பச்சையப்பன், பொதுச்செயலா் வெங்கடேசன் ஆகியோா் பேசினா். பின்னா், விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிா்வாகிகள் கண்ணன், ரங்கநாதன், பாலு, செல்வகணபதி, ஆறுமுகம்,கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.