முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
சிதம்பரம், அண்ணாமலை நகரை சோ்ந்த நடராஜன் மகன் மணிவண்ணன் (31). தனியாா் பேருந்து நடத்துநா். இவா் வியாழக்கிழமை இரவு பண்ருட்டியில் இருந்து கடலூா் செல்லும் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்தாா்.
இதில் பயணித்த நெல்லிக்குப்பம் பெரிய சோழவள்ளியைச் சோ்ந்த ராமதாஸ் மகன் கபாலி (எ) மோகன்தாஸ் (22) தூங்கி விட்டதால், நெல்லிக்குப்பத்தில் இறங்கவில்லை. இதுகுறித்து நடத்துநா் மணிவண்ணனிடம் தகராறு செய்தாராம். மேலும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மோகன்தஸை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.