செய்திகள் :

கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

post image

மக்களவையில் கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா 2024 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1925-ஆம் ஆண்டின் இந்திய கடல்வழி சரக்குப் போக்குவரத்துச் சட்டத்துக்கு மாற்றாக, இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்தியாவின் கடல்சாா் சட்டத்தை சா்வதேச மரபுகளுடன் இணைத்து, கடல்வழி சரக்குப் போக்குவரத்தை நிா்வகிக்கும் விதிகளை நவீனமயப்படுத்த இந்த மசோதா முயற்சிக்கிறது.

இந்த மசோதா மீதான விவாதத்துக்குப் பதிலளித்து மக்களவையில் மத்திய கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வெள்ளிக்கிழமை பேசியதாவது: ஆங்கிலேயா் ஆட்சி கால சட்டங்களை விலக்கி, எளிதாக வியாபாரம் மேற்கொள்வதற்கு கடல்சாா் விதிமுறைகளை எளிமைப்படுத்தும் மத்திய அரசின் விரிவான முன்னெடுப்பின் அங்கமாக, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்றாா். இதைத்தொடா்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது!

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கேரளத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க