செய்திகள் :

கடின உழைப்புக்கு பலன்: தேவ்தத் படிக்கல்

post image

ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது சவாலான பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

நேற்றிரவு (ஏப்.7) வான்கடே திடலில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதியது. இந்தப் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று ஆர்சிபி அசத்தியது.

இந்தப் போட்டியில் 22 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார் தேவ்தத் படிக்கல். ஸ்டிரைக் ரேட் 168.18ஆக இருந்தது.

தேவ்தத் படிக்கல் 2024இல் லக்னௌ அணிக்காக 7 இன்னிங்ஸில் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

ஐபிஎல் 2025க்கான ஏலத்தில் கடைசி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆர்சிபியால் வாங்கப்பட்டார். இது குறித்து போட்டிக்குப் பிறகு தேவ்தத் படிக்கல் கூறியதாவது:

கடின உழைப்புக்கு பலன்

முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. தற்போது, 3-4 ஆண்டுகளில் என்னுடைய தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளேன். இது எளிதான விஷயமில்லை. நீங்கள் சில நேரங்களில் எவ்வளவு முயற்சித்தாலும் அது நிகழ்வதில்லை.

இந்த சீசனில் பேட்டிங்கில் கடினமாக உழைத்துள்ளேன். கடந்த ஆண்டு நினைத்த அளவுக்கு விளையாடவில்லை. என்னை மேம்படுத்த வேண்டிய சூழ்நிலைகள் இருப்பதை நான் அறிவேன்.

இந்த ஐபிஎல் போட்டிகள் தொடர்வதற்கு முன்பாக என்னுடைய கடின உழைப்பு தற்போது பலனை அளித்துள்ளது.

எங்கு விளையாடினாலும் வெல்லுவோம்

அனைத்து போட்டிகளும் எங்களுக்கு முக்கியமானது. எங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள், எங்கு விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. அப்படித்தான் நாங்கள் சிஎஸ்கே, மும்பை, கேகேஆர் உடனும் விளையாடினோம்.

நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் அந்த நேரத்தில் அதை வெல்ல நினைக்கிறோம். அவ்வளவுதான். ஏனெனில் எந்தத் தருணம் நம்மை தொடரில் கொண்டு செல்லும் என்பது தெரியாது.

நாங்கள் எங்கு சென்றாலும் வெல்ல வேண்டுமென நினைக்கிறோம் என்றார்.

சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது. நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்ப... மேலும் பார்க்க

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் அதிவேகமாக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்... மேலும் பார்க்க

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன்

கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) கேப்டன் அஜிங்யா ரஹானே பஞ்சாப் அணியுடனான மோசமான தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்... மேலும் பார்க்க