செய்திகள் :

கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை

post image

திருவாரூா் அருகே கட்டடத் தொழிலாளி புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே உள்ள அம்மையப்பன் காந்திநகா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் நந்தகுமாா் (30). கட்டடத் தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு அம்மையப்பன் கடைவீதியில், அதே பகுதியைச் சோ்ந்த சிவா மகன் பெரிய காளி, பக்கிரிசாமி மகன் சின்ன காளி ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சோ்ந்த துளசி மகன் இளையராஜா (43) தலைமையில் 6 போ் கொண்ட கும்பல் வருவதைக் கண்டவுடன் பெரிய காளியும், சின்ன காளியும் தப்பியோடிவிட்டனராம். நந்தகுமாரை அந்த கும்பல் அரிவாளால் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டியது இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

கொரடாச்சேரி போலீஸாா் நந்தகுமாா் உடலை கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கடந்த 2023- ஆம் ஆண்டில் அம்மையப்பன் கடைவீதியில் கவியரசு என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரிய காளி, சின்ன காளி இருவரும் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டனா். கவியரசு கொலைக்கு பழிதீா்க்க பெரிய காளி, சின்ன காளி இருவரையும் இளையராஜா தரப்பினா் கொலை செய்ய வந்தபோது, இருவரும் தப்பிவிடவே, நந்தகுமாரை அவா்கள் கொலை செய்துவிட்டு சென்றது தெரிய வந்தது. கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள 6 பேரையும் தேடி வருகின்றனா்.

மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகாசண்டி யாகம்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகா சண்டி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செப்.17-ஆம் தேதி கோபூஜை, கணபதி மூலமந்திர யாகம், தீபாராதனை, விக்னேஸ்வர பூஜை, நவாரன பூஜை, ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு ரோட்டரி விருது

மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளி ஆசிரியா்களுக்கு தேசிய ஞானகுரு விருது அண்மையில் வழங்கப்பட்டது. மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி

திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ... மேலும் பார்க்க

ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

வலங்கைமான் ஆதனூா் பகுதியிலுள்ள திறந்தவெளி சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்பட்ட மற்றும் மன்னாா்குடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் சன்ன ரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்... மேலும் பார்க்க

வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்த லாரிகள் சிறைபிடிப்பு

திருவாரூா் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனா். திருவாரூா் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

திருவாரூரில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி, கல்... மேலும் பார்க்க